25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள குரூப் ‘B’ மற்றும் ‘C’  பணிகளுக்கான  SSC (Staff Selection Commission) தேர்விற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள குரூப் ‘B’ மற்றும் ‘C’ பணிகளுக்கான SSC (Staff Selection Commission) தேர்விற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள குரூப் ‘B’ மற்றும் ‘C’  பணிகளுக்கு SSC (Staff Selection Commission) தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். Inspector of Income Tax, Postal Assistan in Dept of Posts, Tax Assistant in CBDT  உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு SSC, CGL தேர்வு மூலம் தோராயமாக 14,582 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் SSC, CGL  தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 04.07.2025 மற்றும் தேர்வு தேதி 13.08.2025 முதல் 30.08.2025 வரை நடைபெற உள்ளது.
 மேலும், MTS/Junior Engineer/Examiner/Accountant/Nursing Office உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு SSC Selection Post Exam-2025 (Phase-XIII)  தேர்வு மூலம் 2,423 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 10th / 12th / ITI /  டிப்ளோமா / பட்டப்படிப்புடன் விண்ணப்பிக்கும் பணிக்குரிய தொழில்நுட்பக் கல்வித் தகுதி அல்லது பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் 23.06.2025, மற்றும் தேர்வு தேதி 24.07.2025 முதல் 04.08.202 வரை நடைபெற உள்ளது.
 
தேர்விற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.100 பெண்கள் SC /ST /PWD /Ex-SM பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு www.ssc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். எனவே. மேற்காணும் தேர்வை மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News