25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


“மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் மானிய விலையில் வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கான தொகுப்புகள் பெற விண்ணப்பித்து பயன் பெறலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

“மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் மானிய விலையில் வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கான தொகுப்புகள் பெற விண்ணப்பித்து பயன் பெறலாம்

விருதுநகர் மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டிற்கு “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் மூலமாக 25,300 எண்கள் ஊட்டச்சத்து தளைகள் விநியோகம் செய்ய ரூ.11.385/- இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.அதன்படி, வீட்டுத் தோட்டத்தில் ஊட்டச்சத்து மிக்க செடிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு வாழை, முருங்கை, பப்பாளி, கறிவேப்பிலை போன்ற 4 வகையான செடிகள் அடங்கிய தொகுப்பு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

தொகுப்பு ஒன்றின் மொத்த விலை ரூ.60/- ஆகும். இத்தொகுப்பு 75% சதவீத மானியத்தில் ரூ.45/-க்கு வழங்கப்படும். பயனாளியின் பங்கு தொகை ரூ.15/- ஆகும். ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ஒரு ஊட்டச்சத்து தொகுப்பு மட்டுமே வழங்கப்படும்.  
 இத்திட்டத்தில், பயன்பெற ஆர்வமுள்ள பயனாளிகள்  https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது உழவன் செயலியில் பதிவு செய்தோ அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News