. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் ,சாப்பிடும் போது…..
.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி, குடும்பத்துடன் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடுங்க.
எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று சாப்பிடுங்க.
தொன தொனன்னு பேசிக் கொண்டு சாப்பிடவேண்டாம்.
சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க, கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதிங்க.
அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்.
பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்.
பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.
ஆரோக்கிய உணவுகளை சிலர் பிடிக்காமல் வைத்துவிடுவாங்க.. அப்படி செய்யாமல் சாப்பிட பழகவும்.
இரவு உணவில் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்.
சாப்பாட்டுக்கு பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்.
சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும்.
சாப்பிடும் முன்பும், பின்பும் நன்றி சொல்ல மறக்காதீங்க.
0
Leave a Reply