25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் சிறப்பாக பயின்ற மாணவர்களுக்காக நீட் மற்றும் க்யூட் நுழைவு தேர்வுக்கான 1 மாத இலவச பயிற்சி வகுப்பு  தொடங்கியுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் சிறப்பாக பயின்ற மாணவர்களுக்காக நீட் மற்றும் க்யூட் நுழைவு தேர்வுக்கான 1 மாத இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைகழகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் சிறப்பாக பயின்ற 110 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கான தங்குமிடம், உணவு வசதிகளுடன் கூடிய நீட் மற்றும் க்யூட் நுழைவு தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டு, 1 மாத காலம்(01.04.2025 முதல் 30.04.2025 வரை) நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையிலும், உயர்கல்வியில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் வகையிலும், சிறந்த மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவர்கள் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, இந்திய அளவில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயிலும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் தற்போது 12 ஆம் வகுப்பில் சிறப்பாக பயின்ற 110 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கான தங்குமிடம், உணவு வசதிகளுடன்; நீட் மற்றும் க்யூட் நுழைவுத் தேர்வுக்கான 1 மாத இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.அதன்படி, 70 மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளும், 40 மாணவர்களுக்கு  க்யூட் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் 01.04.2025 முதல் 30.04.2025 வரை நடத்தப்படுகிறது.

இப்பயிற்சி வகுப்பில் சிறந்த ஆசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு தேர்விற்கு தயார்படுத்துவது, தேர்வில் பாடப்பிரிவு வாரியாக கேட்கப்படும் கேள்விகள், அதற்குரிய மதிப்பெண்கள், எளிதான, நடுத்தர, கடினமான கேள்விகள் என தரம் பிரித்து அணுகும் முறைகள், எளிதாக கேள்விக்கான பதில்களை மனதில் பதிய வைத்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்துரைக்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News