25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நேர்மறையான எண்ணங்களோடு பயணிக்க பெண்களுக்கு உதவியாக உள்ள வெள்ளி கொலுசு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நேர்மறையான எண்ணங்களோடு பயணிக்க பெண்களுக்கு உதவியாக உள்ள வெள்ளி கொலுசு.

பெண்களின் கால்களுக்குக் கூடுதல் அழகைச் சேர்க்கிறது அவர்கள் அணியக்கூடிய கொலுசுகள். இந்தியாவில் வெள்ளிக்கென்று தனி மவுசு உள்ளது.நம்முடைய முன்னோர்கள் சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயங்களிலும் ஒவ்வொரு விதமான பராம்பரியம் ஒளிந்துள்ளது. இதைப் பராம்பரியமாக பின்பற்றி வந்தாலும், இக்காலத்திற்கு ஏற்ப பல விதமான டிசைன்களில் அணிந்து மகிழ்கின்றனர். அதுவும் பெண்களுக்கு அழகு சேர்ப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியத்திற்கு என்பதால் வெள்ளியில் கொலுசுகளை அணிந்து மகிழ்கின்றனர்..பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். இவற்றைக் குறைக்க வேண்டும் என்பதால் தான் வெள்ளியிலான கொலுகளை அணிய சொல்கின்றனர்.. வெள்ளி கொலுசுகளைப் பெண்கள் காலில் அணியும் போது எலும்புகள் வலுவடையும். வெள்ளி உலோகம், கணுக்கால்களைத் தொடும் போது, தோலில் ஊடுருவி எலும்புகளை வலுப்படுத்த உதவியாக உள்ளது.வெள்ளி கொலுகளை அணியும் பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் குணப்படுத்தவும், கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உதவியாக உள்ளது. மேலும் வெள்ளியிலான கொலுசுகளை அணியும் போது பெண்களுக்கு ஹார்மோன் அளவை சமன் செய்ய உதவியாக உள்ளது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.

நாள் முழுவதும் பெண்கள் நின்றுக் கொண்டே பல்வேறு வேலைகளைச் செய்வதால் கால் வலி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், இந்த பிரச்சனையை வெள்ளி கொலுசு அணிவதன் மூலம் தீர்க்க முடியும்.வெள்ளி கொலுசுகள் குதிகால் நரம்பைத் தொட்டு கொண்டிருப்பதால், இந்த நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. இதோடு பெண்களின் இடுப்பு பகுதியை உறுதிப்படுத்தவும் வெள்ளி கொலுசுகள் பயன்படுகிறது. இதனால் தான் நம்முடைய முன்னோர்கள் கட்டாயம் கால்களில் தண்டை, சிலம்பு, கொலுசு என காலத்திற்கு ஏற்ப பல வடிவங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.உடலில் உள்ள சூட்டை அகற்றுவதோடு, இதனால் ஏற்படக்கூடிய சரும பிரச்சனைகளையும் சரி செய்வதற்கு வெள்ளி கொலுசுகள் உதவியாக உள்ளது.வெள்ளி கொலுசுகளை அணிவதன் மூலம் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும், இதோடு பெண்களுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு விதமான நோய்களுக்குத் தீர்வு காணவும் உதவியாக உள்ளது. வெள்ளி கொலுசுகளைக் கால்களில் அணியும் பெண்கள் அழகாகத் தெரிவதோடு, உலோகத்தில் உள்ள கதிர்வீச்சுகள் அவர்களின் மனநிலையை மாற்றமும், எப்போதும் நேர்மறையான எண்ணங்களோடு பயணிக்கவும் பெண்களுக்கு உதவியாக உள்ளது..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News