25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் (21.06.2024) திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இம்முகாமில், திருநங்கைகள் நல வாரிய அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளுதல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை  மற்றும் வாக்காளர் அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான சுமார்65மனுக்கள்பெறப்பட்டன.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து  உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
 இம்முகாமில், 25 நபர்களுக்கு திருநங்கை அடையாள அட்டைகளையும், 14 நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளையும், 9 நபர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டைகளையும்,  4 நபர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், 7 நபர்களுக்கு ஆதார் அட்டைகளையும் என மொத்தம் 59 திருநங்கைகளுக்கு  நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் திருமதி ஷீலாசுந்தரி, உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News