25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து  ஆய்வு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு

விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையின்; சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (30.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, வெம்பக்கோட்டை வட்டாரம், இரவார்பட்டி கிராமத்தில், தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வைக்கான இயக்கம் 2023-24 (TNMSGCF) திட்டத்தின்கீழ், 5 ஏக்கர் பரப்பளவில் 950 சவுக்கு மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதையும்,அதனை தொடர்ந்து, சுப்பிரமணியபுரம் கிராமத்தில் தோட்டக்கலைத்துறை மூலம்  செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனம் முறையில் 5 ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதையும்,தாயில்பட்டி கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கமலம் பழம் மானியத்தில் வழங்கப்பட்டு சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் திருமதி க.விஜயா,  வேளாண்மை துணை இயக்குநர் /மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  திருமதி ஆ.நாச்சியார் அம்மாள், திருவில்லிபுத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி கு.தனலட்சுமி, வேளாண்மைத்துறை அலுவலர்கள், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News