25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அனைத்து வாகன புகை பரிசோதனை நிலையங்கள் 06.05.2024 முதல் புதிய தொழில்நுட்பத்தை (PUCC  2.0 version) பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அனைத்து வாகன புகை பரிசோதனை நிலையங்கள் 06.05.2024 முதல் புதிய தொழில்நுட்பத்தை (PUCC 2.0 version) பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

வாகனங்களின் மூலம் வெளியிடப்படும் புகை அளவு அதிகரிப்பதை கட்டுக்குள் வைக்க மாநிலம் முழுவதும் 534 வாகன புகை பரிசோதனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. வாகனங்களின் மூலம் வெளியிடப்படும் புகை அளவு அதிகரிக்கும் காரணத்தால் காற்று மாசுபாடு ஏற்பட்டு அதனால் நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் பொதுமக்களிடையே ஏற்படுகிறது.இதனை கட்டுக்குள் வைக்க மாநிலம் முழுவதிலும் 534 வாகன புகை பரிசோதனை மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இயங்கி வருகின்றன. புகை பரிசோதனை மையங்கள் தொடர்பான புகார்கள் வந்ததை அடுத்து, கடந்த மாதம் 13-ஆம் தேதி மாநிலம் முழுவதும் வாகனபுகை பரிசோதனை மையங்கள் திடீர் தணிக்கை செய்யப்பட்டன.

வாகன புகை பரிசோதனை மையங்களின் செயல்பாட்டினை மேலும் மேம்படுத்தவும், புகார்களுக்கு இடமளிக்காத வகையில் தொழில்நுட்பங்களைப் புகுத்தவும் போக்குவரத்துத் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனடிப்படையில் இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக தமிழ்நாட்டில் புதிய நடைமுறை 06.05.2024 முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது குறித்த செயல்முறை விளக்கத்தை மாநிலம் முழுவதிலுமுள்ள வாகன புகை பரிசோதனை மைய சோதனையாளர், உரிமையாளர் ஆகியோருக்கு அனைத்து வட்டாரப் அலுவலகங்களிலும் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் வழங்குவார்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகரில் 5 புகை பரிசோதனை மையங்களும், அருப்புக்கோட்டையில் 1, சிவகாசியில் 4, திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் பகுதியில் 4 ஆக மொத்தம் 14 வாகன புகை பரிசோதனை மையங்கள் உள்ளன.
புதிய தொழில்நுட்பத்தின் படி அந்தந்த வாகன புகை பரிசோதனை மையத்திற்கென தனிப்பட்ட அலைபேசி உரிமதாரரால் பயன்படுத்தப்படும். அந்த அலைபேசியில் இந்த PUCC 2.0 Version App-ஐ நிறுவி இயக்க வேண்டும். இந்த புதிய Version GPS  வசதியுடன் கூடியதாகும். இந்த செயலி நிறுவப்பட்ட அலைபேசி தொடர்புடைய வாகன புகை பரிசோதனை மையத்திலிருந்து 30 மீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே செயல்படும். அதைப்போலவே சோதனை செய்யப்படும் வாகனங்கள் அந்த புகை பரிசோதனை மையத்திற்கு கொண்டு வந்து சோதனை செய்யப்படுவதை துல்லியமாக காட்டும் புவியிடக் குறியீடு (GPS enabled Photo with Latitude, Longtitude) இருப்பதனால் சோதனை மையத்திற்கு வாகனங்களை கொண்டு வராமலேயே புகை பரிசோதனையை இனி செய்ய இயலாது.
 

எனவே, மேற்கண்ட முக்கிய அம்சங்கள் உள்ளதால் இந்த புதிய தொழில்நுட்பத்தை (PUCC 2.0 version) 06.05.2024 முதல் அனைத்து வாகன புகைப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத்தவறும் வாகன புகை பரிசோதனை மையங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடி சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News