25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற  விழிப்புணர்வு நிகழ்ச்சி,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி,

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில்  (08.04.2024) மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு, 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற முதல்முறை மற்றும் இளம் வாக்காளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தற்போது வாக்களிப்பதற்கு 18 வயது பூர்த்தி அடைந்தால் போதும் என்ற தகுதி மட்டுமே உள்ளது. ஆனால் நூறு வருடத்திற்கு முன் நடந்த தேர்தலில் எல்லோருக்குமான வாக்குரிமை இல்லை. வருமான வரி செலுத்துவோர் போன்ற குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே இருந்தது. பெண்களுக்கான ஓட்டுரிமையும் பிற்காலத்தில் தான் கிடைக்கப்பெற்றது.வளர்ச்சி அடையக்கூடிய ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது மிக முக்கியமானது. அந்த உரிமை இன்று எல்லாருக்கும் கிடைத்திருக்கிறது. அதை நாம் கவனத்தோடும் முழுமையாகவும் பதிவு செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்கூறும் நோக்கத்துடன் தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

 கடந்த தேர்தலில் இந்தியா முழுவதும் பெற்ற வாக்கு சதவீதம் 68 விழுக்காடு. தமிழ்நாட்டில் கடந்த சில தேர்தல்களில் சுமார் 71 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. நான்கில் ஒரு நபர் வாக்கு அளிப்பதில்லை. நன்கு மெத்த படித்தவர்கள் உள்ள நகர்ப்புற பகுதிகளில் தான் வாக்குப்பதிவு குறைவாக உள்ளது. ஜனநாயகம் வழங்கி இருக்கக் கூடிய மிகப்பெரிய வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்திய ஜனநாயக தேர்தலில் பணம் பரிசுப் பொருள்கள் பெற்று வாக்குகளை பெறுவது, வன்முறை சூழல்களை ஏற்படுத்தி மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, தவறான தகவல்களை பரப்புவது போன்ற மூன்று சவால்களை இந்திய தேர்தல் ஆணையம் எதிர்கொள்கிறது.


இந்த சவால்கள் குறித்து இளைஞர்கள், மாணவர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் நடைமுறை. நம்மை ஆளக்கூடியவர்கள் பற்றியும், தேர்தல் நடைமுறைகள் என்ன என்பதை குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.
இன்று நமக்கு நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. அதில் எது சரி எது தவறு என்பதை புரிந்து கொள்வது இந்த தலைமுறைக்கான மிகப்பெரிய பிரச்சினையாக கூறப்படுகிறது. அவ்வாறு கிடைக்கப்பெறும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து செயலாற்ற வேண்டும்.ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது மிக முக்கியமானது. ஜனநாயக நாட்டில் நாம் எந்த ஒரு மாற்றத்தையும் ஜனநாயக வழியில் தான் ஏற்படுத்த முடியும்.

வேட்பாளர்களுடைய விவரங்களை அறிந்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கலின் போது படிவம் 26 தாக்கல் செய்து விடுவார்கள். அவருடைய கல்வி தகுதி, சொத்து விவரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை இணையதளம்; மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாக எவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றோமோ அவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

இன்றைய சூழ்நிலையில், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நிறைய தகவல்கள் வருகின்றன. அந்த தகவல்களில் எது சரி என்பதை நாம் சற்று தேர்ந்த பார்வையோடு பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம். நீங்கள் தெளிவான பார்வையுடன் சற்று முயற்சி செய்தால் தெளிவான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.மாணவர்கள் முதலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் யாருக்கு எதற்காக வாக்களிக்கிறோம் என்று நன்கு அறிந்து வாக்களிக்க வேண்டும். பணம், பொருள் எதுவும் பெறாமல் யார் தகுதியானவர்கள் என்று அறிந்து வாக்களிக்க வேண்டும்.

வாக்களிப்பதன் அவசியத்தை தங்களது பெற்றோர்கள் தாங்கள் வசிக்கும்  இடங்களில் உள்ளவர்களிடம் எடுத்துக்கூறி, தகுதியான நேர்மையான நபர்களுக்கு வாக்களிக்க தூண்டுகோலாக இருந்து ஒரு வலுவான ஜனநாயகம் உருவாவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும்  அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும்  அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கலந்து கொண்ட முதல்முறை மற்றும் இளம் வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News