கேரள கோயில்களுக்கு ஆனந்த் அம்பானியின் ரூ.22.55 கோடி நன்கொடை. திருமலை தேவஸ்தானத்துக்கும் ஆனந்த் அம்பானியின் முக்கிய பங்களிப்பு.
ரிலையன்ஸ் குழும இயக்குநர் ஆனந்த் அம்பானி, கேரளாவின் ஒன்பது வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களின் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.22.55 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
இதில், ராஜராஜேஸ்வரம் கோயிலுக்கு ரூ.12 கோடியும், குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலுக்கு ரூ.6 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 கோயில்களுக்கு மொத்தம் ரூ.4.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 25 மின்சார பேருந்துகளை நன்கொடையாக வழங்க ஆனந்த் அம்பானி முன்வந்துள்ளார். மேலும், 50 பேருந்து ஓட்டுநர்களின் ஊதியத்துக்கு நிதியுதவி அளிப்பதுடன், ரிலையன்ஸ் நிறுவனம் மின்னேற்றும் (Charging) நிலையங்களையும் அமைக்க உள்ளது.
அதோடு, குஜராத்தில் செயல்பட்டு வரும் 'வந்தாரா' திட்டத்தைப் போல, திருமலை தேவஸ்தான கோசாலையை நவீனமயமாக்கவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்
0
Leave a Reply