ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் அன்கிதா ரெய்னா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் தாய்லாந்தில் ,இந்தியாவின் அன்கிதா ரெய்னா, தைவானின் யு யுன்-லி ஜோடி இரட்டையர் பிரிவுமுதல் சுற்றில், ஜெர்மனியின் நாஸ்டஸ்ஜா, இத்தாலியின் லிசா ஜோடியை எதிர்கொண்டது. அன்கிதா ஜோடி முதல் செட்டை 4-6 என இழந்து ,இரண்டாவது செட்டை 6-2 என வென்றது.வெற்றியாளரை நிர்ணயிக்க நடந்த 'சூப்பர் டை பிரேக்கரில்' போட்டியின் முடிவில் அன்கிதா ஜோடி 4-6, 6-2, 10-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
இந்தியாவின் ருடுஜா போசாலே, சீனாவின்உஷுவாங்ஜெங்ஜோடி, மற்றொருமுதல்சுற்றில்ஹாங்காங்கின்கோடி வாங், தைவானின் யா-ஹிசின் லீ ஜோடியை சந்தித்தது. போட்டியின் முடிவில் ருடுஜா ஜோடி 6-4, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
0
Leave a Reply