25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நாம் செய்வது சரியா? தவறா?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நாம் செய்வது சரியா? தவறா?

பலருடைய உள்ளத்தில் இந்த ஒரு கேள்வி எழாமல் இருப்பதில்லை. தான் செய்யும் ஒவ்வொரு செயலும் சரியா? தவறா? என்று யோசிப்பதிலேயே காலத்தையும், மனசையும் கெடுத்துக் கொள்கின்றனர்.ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பெரியவர்கள் கூட 'உனக்கு எது சரின்னு படுதோ அதைச் சட்டுபுட்டுன்னு செய்வியா?' என்பார்கள்.ஏனென்றால் முடிவெடுப்பதில் யோசித்துக் கொண்டு யாரிடமாவது கேட்டு முடிவெடுக்கலாம் என்றால் அவசர முடிவுகளுக்கு என்ன செய்வார்கள்.சரியா? தவறா? என்ற யோசனை சாதாரண உடை விஷயத்திலிருந்து அடுக்கிக் கொண்டே போகலாம். திருமணத்திற்கோ நிச்சயதார்த்தம், சங்கவிழா, ஏன் துஷ்டி வீட்டிற்குப் போவதற்குக் கூட பல பெண்கள் என்ன புடவை, என்ன நகை போடுவது என்று அலைபாய்ந்து நொந்து போகின்றனர். அவர்கள் மனம் எது சரி? என்ற தெளிவான சிந்தனையை சிந்திப்பதில்லை, சரி சமையலை எடுத்துக் கொள்வோம். விருந்தாளி வருகிறார்கள், வகையா சமைக்கணும், என்ன சமைப்பது என்று யோசித்தே சமைக்க ஆரம்பிப்பதற்கு முன்பே தலைவலியில் படுத்து விடுகின்றனர்.

வியாபாரத் துறையிலும் சரி முடிவெடுப்பதற்கு படாதபாடு படுவார்கள். பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவெடுப்பதற்குள் உள்ளம் பதறி மனம் படபடத்து செய்வதறியாது திருமணத்தை தள்ளிப் போடுபவர்கள் பலர்.இந்த மனிதர்களிடையே ஒரு சிலா முடிவெடுப்பதில்  தாமதிக்காமல் டக்கென்று முடித்து விடுவார்கள். இப்ப என்ன? நடக்கிறது நடக்கட்டும். எந்த வியாபாரம்  தான் டென்ஷன்  இல்லாதது, வரும் போது பார்த்துக்கலாம் என்று தைரியமாக முடிவெடுப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பிரகாசிக்கிறார்கள். பெற்றவர்களாகஎன்ன ஆகி விடுமோ? என்ற பயம் இருக்கும் வரை நம் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. அதனால் முடிவெடுப்பதில் முட்டாள் தனமான முடிவும் கஷ்டத்தில் கொண்டு போய் தள்ளிவிடும்.நாள், நட்சத்திரம் பார்த்து பல விஷயங்களைத் தள்ளிப் போடுபவர்கள் அவசரமாக வைத்தியம் செய்வதைத் தள்ளிப் போட்டு உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வருபவர்கள் பலர் உண்டு.

வீட்டை விட்டு புறப்படும் பொழுது மந்தாரமாக இருக்கே குடை எடுத்துட்டுப் போகவா? வேண்டாமா? என்று ரெம்ப நேரம் குழம்புவார்கள். முடிவெடுப்பதில் உள்ள குறை. 'ஒன்று குடை எடுத்துட்டுப் போங்க, இல்லாட்டி நனைஞ்சுட்டு வந்தா உங்க மண்டையிலே என்ன செடியா முளைச்சிடும். துணி தானே நனையும் காயப் போட்டுக்கலாம்! இது துரிதமாக முடிவெடுக்கும் மனைவியின் அபிப்ராயம்.என்ன நடந்தாலும் பரவாயில்லை. நடப்பது நடக்கட்டும் எனக்கு இது சரியென்று படுது நான் செய்கிறேன். தவறாயிட்டா அப்புறம் திருத்திக்கிறேன். இது முடிவெடுப்பதில் தைரியம் உள்ளவர்களின் மனப்பான்மை.

நீங்க எப்படி? சரியா இது ? தவறா?   ….சரிதான்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News