25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


கிருஷ்ணன்கோவில் அரசு மாதிரி பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிருஷ்ணன்கோவில் அரசு மாதிரி பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் அரசு மாதிரி பள்ளியில் (26.09.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.

நமக்கு கனவுகள் என்பது அதிகமாக இருக்கின்றது. கனவுகள் அடைய வேண்டும் என்றால் நம்பிக்கை, விடாம முயற்சி மற்றும் கடின உழைப்பு வேண்டும் என்பதை எல்லாம் விட தங்களுக்கு கனவுகளை அடைய வேண்டும் என்றால் நாம் அனைவரும் நன்கு படிக்க வேண்டும். அப்பொழுது தான் நம்முடைய உழைப்பிற்கு ஏற்ப பலன் உண்டு. அந்த பலன் கல்வியில் மிக அதிகமாக இருக்கும்.
நீங்கள் ஒவ்வொரு நாளும் படிக்க படிக்க தான் முன்னேறி செல்வீர்கள். இன்றைக்கு அரசு பள்ளியில்; ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது மிகப்பெரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பு முன்பு இல்லை.

 ஏனென்றால் நம்முடைய கல்வி முறை  என்பது மாறி கொண்டே இருக்கும். அதாவது மருத்துவத்துறையில்,; கடந்த 50 வருடங்களில் 10 முறை மாற்றம் வந்துள்ளது. அதனால் நாம் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.நீங்கள் ஒவ்வொருவரின் உழைப்புக்கும் மிகப்பெரிய ஊதியம் காத்துக் கொண்டிருக்கிறது. அதனால், நீங்கள் எந்த அளவு உழைக்கின்றீர்களோ அந்த அளவுக்கு உயர்வீர்கள். பன்னிரண்டாம் வகுப்பில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானதாக இருக்கும் மற்றும் ஒவ்வொரு மணி நேரமும் நீங்கள் தேர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள். அதனை நீங்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒருமுறை தேர்வு எழுதினால் மறுபடியும் அந்த வாய்ப்பு நமக்கு கிடைக்காது. ஒவ்வொரு மணி நேரமும் உங்களுக்கு ஒரு தங்க முட்டை போன்றது. அதனை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த ஒவ்வொரு மணி நேரமும் தங்களுக்கு திரும்ப கிடைக்காது எனவும், மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து பெரிய  அளவில் சாதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், வட்டாட்சியர், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News