25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


உலகம் முழுவதும் விரும்பக்கூடிய பறவை மயில்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகம் முழுவதும் விரும்பக்கூடிய பறவை மயில்கள்.

பறவைகளில் மிக அழகானது மயில். முருகப்பெருமானின் வாகனமாக போற்றப்படுகிறது. பொதுவாக, பறவைகளில் பெண் இனங்கள்தான் அழகாக தோன்றும். ஆனால், மயில் இனத்தில் ஆண் மயில்கள்தான் அழகாக தோன்றுகிறது. மயில்கள் தெற்காசிய நாடுகளில் பரவி காணப்படும் மிகப்பெரிய பறவை இனம். இவற்றின் அழகை கண்டு, ஐரோப்பிய செல்வந்தர்கள் வளர்ப்பு பறவைகளாக தங்கள் நாடுகளுக்கு கொண்டு சென்றதாக வரலாறுகள் கூறுகின்றன. 

பின்னர் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் மயில்கள், வளர்ப்பு பறவைகளாக மாறின. எகிப்து நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட மயில்களின் அழகில் மயங்கிய எகிப்தியர்கள் அதனை மாயப் பறவை என்று புகழ்ந்தனர். மயில்கள் நல்ல நல்ல அதிர்ஷ்டங்களை கொண்டு வரும் என்று நம்பினர். மயில்கள் தோகையை விரிக்கும் அழகிய நிகழ்வை வெளிநாடுகளில் வியந்து ரசிக்கிற மக்கள் ஏராளம். மயில்கள் கோழி இனத்தை சேர்ந்த பறவைகள் என்றாலும், கோழிகளை விட புத்திசாலித்தனமும், மனிதர்களோடு எளிதாக பழகும் தன்மையும் கொண்டிருக்கின்றன.

ஒரு காலத்தில், மயில் இறைச்சியை அதிக அளவில் உணவாக சாப்பிட்ட ஐரோப்பியர்கள், மயில்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெற்று, மயில் இறைச்சியை விட்டுவிட்டு ,வான்கோழி இறைச்சிக்கு மாறியதாக கூறப்படுகிறது. இந்தியாவின் பெருமைமிகு பறவை இனமான மயில்கள், உலகம் முழுவதும் விரும்பக்கூடிய பறவைகள் என்பதில் சந்தேகமில்லை. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News