கருப்பு கவுணி அரிசி – வெல்ல புட்டு
தேவையான பொருட்கள்-
1 கப் கவுணி அரிசி மாவு,3/4 கப்நாட்டு சக்கரை,
1/2 கப் தேங்காய். ,2 டேபிள்ஸ்பூன் நெய்,. 8-10 முந்திரி,
1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்,ஒரு சிட்டிகை உப்பு.
செய்முறை -
(கருப்பு கவுணி அரிசியை2 மணி நேரம் தண்ணீரில் ஊற விட்டு ஈரம் போக காய வைத்து ஸ்டவ்வில் வாணலியில் வாசம் வரும்வரை வறுத்து ஆற விட்டு பொடித்த மாவு)
ஒரு பவுலில் அரிசி மாவு சேர்த்து உப்பு மற்றும் வெந்நீர் விட்டு தெளித்து நன்கு பிசைந்துக்கவும்.
கையில் பிடித்தால் பிடிக்க வரணும், விடும்போது உதிர்ந்துந்துடனும் இதுதான் பக்குவம்.
ஸ்டவ்வில் கரண்டி வைத்து நெய் ஊற்றி முந்திரி, தேங்காய் சேர்த்து வறுத்து எடுத்துக்கவும்.ஸ்டவ்வில் இட்லி பாத்திரம் வைத்து சூடானதும், இடியாப்ப தட்டில் பிசைநது வைத்திருக்கும் மாவை எடுத்து வைத்து,15 நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைத்து ஆவியில் வேக விடவும்.
அதன் பிறகு சூடு மாவை எடுத்து வேறொரு பாத்திரத்தில் போட்டு சூடு ஆறினதும், அத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து கலந்துக்கவும்.
அத்துடன் நாட்டுச்சக்கரை சேர்த்து நன்கு கலந்து, நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும்.
கடைசியாக ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து விட்டால் அருமையான ருசியில் ஆரோக்கியமான கருப்பு கவுணி அரிசி வெல்ல புட்டு தயார்.
சிறு தானியங்களில் மிக மிக மருத்துவ குணம் நிறைந்த கருப்பு கவுணி.இதில் நிறைய புரதம், பைபர் மற்றும் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கின்றது.கான்சர் நோய் வராமலும் தடுக்கிறது.
0
Leave a Reply