25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பகுதி அளவிலான தையல் தொழில் குழுக்களுக்கான வாங்குபவர் மற்றும் விற்பவர்களுக்கான (Buyer-Seller) வணிக இணைப்புக் கூட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பகுதி அளவிலான தையல் தொழில் குழுக்களுக்கான வாங்குபவர் மற்றும் விற்பவர்களுக்கான (Buyer-Seller) வணிக இணைப்புக் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (20.09.2024) வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பகுதி அளவிலான தையல் தொழில் குழுக்களுக்கான வாங்குபவர் மற்றும் விற்பவர்களுக்கான (Buyer-Seller) வணிக இணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் 14 ஆடை உற்பத்தியாளர்கள் நிறுவனங்களும், 6 பகுதி அளவிலான தையல் தொழில் குழு நிர்வாகிகளும் மற்றும் ஆடை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் வாயிலாக பகுதி அளவிலான தையல் தொழில் குழுக்களுக்கான கொள்முதல் மற்றும் விற்பனை ஆணை ஆடை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்து தரப்பட்டது. இதன் மூலம் தையல் தொழில் குழுக்களின் வருமானம் அதிகரிக்கவும் பெண் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டது இக்கூட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் திருமதி ராஜாத்தி,  வாழ்ந்து காட்டுவோம் திட்ட பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News