செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகளுக்கு தொடர்ந்து 2வது வெற்றி.
உஸ்பெகிஸ்தானின் கண்ட் நகரில் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. ஓபன் பிரிவில் 208 அணிகளும், பெண்கள் பிரிவில் 192 அணிகளும் என மொத்தம் 400 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஓபன் பிரிவின் 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இந்தோனேஷியாவை எதிர்கொண்டது. இந்தியாவின் நிஹால் சரின், 37-வது நகர்த்தலில் இந்தோனேஷியாவின் ஆரிப் அப்துல் ஹபிசை வீழ்த்தினார்.
மற்ற போட்டிகளில் இந்திய வீரர்களான பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜ்ராத்தி ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர். இதன்மூலம் இந்திய அணி 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பதிவு செய்தது. முதல் சுற்றில் தாய்லாந்தை இந்தியா வீழ்த்தியிருந்தது.
பெண்கள் பிரிவின் 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, பின்லாந்தை எதிர்கொண்டது.
இந்தியாவின் திவ்யா 38-வது நகர்த்தலில் பின்லாந்தின் ஜோஹன்னாவை வீழ்த்தினார். மேலும், இந்திய வீராங்கனைகள் வந்திகா அகர்வால், சவிதா ஸ்ரீ ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் வைஷாலி, அனஸ்டாசியா கெய்னானெனுக்கு எதிரான போட்டியை டிரா செய்தார்.
முடிவில் இந்திய அணி 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்தது. முதல் சுற்றில் டொமினிகன் குடியரசு அணியை இந்தியா வீழ்த்தியிருந்தது.
0
Leave a Reply