25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வெடி விபத்துகளில் உயிரிழந்தவர்களின் 4 குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெடி விபத்துகளில் உயிரிழந்தவர்களின் 4 குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமம் குருஸ்டார் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு  தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சம் வீதம் 4 நபர்களுக்கு மொத்தம் ரூ.12  இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள்  (29.06.2024)  வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியருக்கு  சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் 29.06.2024 அன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 இலட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, வெடிவிபத்தில் உயிரிழந்த வெம்பக்கோட்டை வட்டம், அச்சங்குளத்தை சேர்ந்த திரு.ராஜ்குமார் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி ராஜலட்சுமி என்பவருக்கும்,  சாத்தூர் வட்டம் நடுச்சூரங்குடியை  சேர்ந்த திரு.மாரிச்சாமி  என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி குருவம்மாள் என்பவருக்கும், வெம்பக்கோட்டை வட்டம் V..சத்திரப்பட்டியை சேர்ந்த திரு.செல்வகுமார் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி)         திருமதி ஈஸ்வரி என்பவருக்கும், வெம்பக்கோட்டை வட்டம் V..சத்திரப்பட்டியை சேர்ந்த திரு.மோகன் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி)  திருமதி விஜய மாரிஸ்வரி என்பவருக்கும்  என உயிரிழந்த 4  நபர்களின் வாரிசுதார்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.12  இலட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், வட்டாட்சியர் திரு.லோகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News