25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


காமன்வெல்த் நிறைவு விழா: இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட கொடி... 2030 போட்டிக்கு பிரமாண்ட வரவேற்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காமன்வெல்த் நிறைவு விழா: இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட கொடி... 2030 போட்டிக்கு பிரமாண்ட வரவேற்பு.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கோலாகல நிறைவு விழாவுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்த உள்ள இந்தியாவிடம் காமன்வெல்த் கொடி அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 74 நாடுகளைச் சேர்ந்த 2,729 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பதக்கப் பட்டியலில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் 4-வது இடத்தைப் பிடித்தது. குறிப்பாக குத்துச்சண்டையில் 7 தங்கம் உள்பட 10 பதக்கங்களை வென்று இந்திய அணி சாதனை படைத்தது.

இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற நிறைவு விழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின. 2030-ம் ஆண்டு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியை முன்னிறுத்தும் வகையில் இந்திய கலாசாரம், பாரம்பரியம் மற்றும் 'உலகம் ஒரே குடும்பம்' என்ற இந்திய தத்துவத்தை பிரதிபலிக்கும் இசை, நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

'வந்தே மாதரம்' பாடல் உருவாகி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடிகையும் முன்னாள் உலக அழகியுமான மனுஷி சில்லர் தலைமையில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் நடனமாடினர். இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் தனது மகன்கள் சித்தார்த், ஷிவத்துடன் இணைந்து பாடியதோடு, குஜராத் பாடகி பூமி திரிவேதியும் தனது குழுவினருடன் இசை நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News