நிறம் மாறும் மலர்.
அல்லி செடி வகையைச் சேர்ந்த ‘விக்டோரியா அமேசானிகா’ உலகின் மிகப்பெரிய நீர்வாழ் தாவரங்களில் ஒன்றாகும்.
இதன் இலைகள் சுமார் 10 அடி விட்டம் வரை வளரக்கூடியவை. வட்ட வடிவிலான இலைகளின் ஓரங்கள் மேல்நோக்கி மடங்கி, பெரிய தட்டு போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
இலைகளைத் தாங்கும் தண்டு மிகவும் உறுதியானதாக இருப்பதால், பெரிய அளவிலான எடையையும் தாங்கும் தன்மை கொண்டது.
இதன் மலர் சுமார் 40 செ.மீ. வரை வளரக்கூடியது. இரவு நேரத்தில் நறுமணத்துடன் மலரும் இந்த மலர், பொதுவாக இரண்டு நாட்களுக்குள் வாடிவிடும்.
முதல் நாள் மலர் வெள்ளை நிறத்தில் காணப்படும். மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற பிறகு, அடுத்த நாள் அது இளஞ்சிவப்பு நிறமாக மாறுவது இதன் சிறப்பம்சமாகும்.
இந்தத் தாவரத்தை செக் குடியரசைச் சேர்ந்த தாவரவியலாளர் டாடியாஸ் ஹீன்கி 1801-ம் ஆண்டு கண்டறிந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
0
Leave a Reply