25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தொழில் நிறுவனங்கள் தமிழக அரசின் சிறந்த தொழில் நிறுவனங்களுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தொழில் நிறுவனங்கள் தமிழக அரசின் சிறந்த தொழில் நிறுவனங்களுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது. தற்போது 2023-24 ஆம் ஆண்டிற்கான கீழ்காணும் பிரிவுகளில் சிறப்பாக தொழில் செய்து வரும் தொழில் முனைவோர்களை விருதுகளுக்காக விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.
 

1. மாநில அளவிலான சிறந்த வேளாண்-சார் உற்பத்தி தொழில் முனைவோருக்கான விருது
2. மாநில அளவிலான சிறந்த மகளிர் தொழில் முனைவோருக்கான விருது
3. சிறப்பாக செயல்படும் நலிந்த மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினை சார்ந்த தொழில் முனைவோருக்கான மாநில அளவிலான விருது
4. மாநில அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கான விருது
5. மாவட்ட அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கான விருது
6. மாநில அளவில் சிறந்த தரம் மற்றும் ஏற்றுமதியில் சிறப்பாக செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கு விருதுகள்  வழங்கப்படுகிறது.

    இவ்விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தொழில் நிறுவனங்கள் 2023-24 நிதியாண்டிற்கு முன்னதாக தொடர்ந்து மூன்று ஆண்டுகள் உற்பத்தியில் ஈடுபட்டிருக்க வேண்டும். மேலும் உத்யம் பதிவுச்சான்றும் பெற்றிருக்க வேண்டும். 

கீழ்கண்ட இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 20.05.2024 ஆகும்.  

விண்ணப்பப் படிவங்களை  awards.fametn.com  என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து உரிய இணைப்புகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் மற்றும்  இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு உதவிகள் தேவைப்பட்டால் மாவட்ட தொழில் மையத்தை அணுகுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News