25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


Dawki River: கண்ணாடி போல காட்சி தரும் 'டவ்கி ஆறு'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

Dawki River: கண்ணாடி போல காட்சி தரும் 'டவ்கி ஆறு'

இந்தியாவில், மேகாலயாவில் உள்ள ஜைந்தியா மலையடிவாரத்தில் உள்ள சிறிய நகரமான டவ்கி வழியாக ஓடுகிறது'டவ்கி ஆறு'. இந்த ஆறு அதனுடைய தூய்மைக்கும், ஆற்றின் படுகையில் இருப்பதை காண இயலும் அளவிற்கு கண்ணாடி போல காட்சி தருவதற்கும் பிரபலமானது. ஆற்றின் படுகையில் இருக்கும் மீன்கள், கற்களை கூட தெளிவாக காண இயலும் அளவிற்கு தூய்மையான நீரை உடையது. இந்த சிறிய நகரத்தில் தான் இந்தியா- பங்களாதேஷ் வணிகம் நடப்பதால், எந்நேரமும் பரபரப்பாகவே இயங்கி கொண்டிருக்கும்.

இந்த ஆறு ஆசியாவிலேயே மிகவும் தூய்மை வாய்ந்த ஆறு என்ற பெயரை பெற்றுள்ளது. இந்த ஆறு பச்சை நிற மரகத நிற நீரை கொண்டதாகும். இந்தியா- பங்களாதேஷிற்கு எல்லையாக இருக்கிறது. டவ்கி ஆற்றில் இருக்கும் பாலம்1932 ல் கட்டப்பட்டதாகும். இந்த ஆறு இதன் அழகிற்கும், இந்த பாலத்திற்கும் பிரசித்தி பெற்றதாகும். மேகாலயாவில் அதிக அளவில்லான சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் இடங்களில் டவ்கி ஆறும் ஒன்றாகும். இந்த ஆற்றின் அழகை ரசித்து மகிழ்வதற்காக படகு சவாரி செய்யும் வசதியும் உள்ளது. இந்த ஆற்றில் குளிப்பதற்கும் அனுமதி உண்டு.இந்த ஆறு எந்த அளவிற்கு தெளிவாக இருக்கும் என்றால் இதில் செல்லும் படகு அந்தரத்தில் மிதப்பது போன்ற ஆப்டிகல் இல்யூஷனை உருவாக்கும் அளவிற்காகும். இதை காண்பதற்காகவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள்இவ்விடத்திற்கு வருகை தருகிறார்கள்.

இந்த ஆற்றிற்கு வரும் கிளையாறுகளான கிழக்கு காசி மற்றும் மேற்கு ஜைந்தியா மலையிலிருந்து வரும் தண்ணீர் எந்த அழுக்கையும் எடுத்துவருவதில்லை. அதனாலேயே இந்த ஆற்றின் நீர் மிகவும் தூய்மையாக இருக்கிறது. டவ்கி ஆறு30 முதல்50 அடி ஆளம் கொண்டதாகும்.டவ்கி ஆற்றிற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதற்கான சரியான நேரம், நவம்பர் முதல் மே மாதம் ஆகும். எல்லா மாதங்களும் இங்கு சுற்றுலாப்பயணிகள் வருகை தரலாம். ஆனால் நவம்பர் முதல் மே மாதம் இந்த ஆற்றின் முழுமையான அழகை ரசிக்க முடியும். டவ்கி ஆற்றில் படகு சவாரி மட்டுமில்லாமல், கயாக்கிங்(Kayaking),மலையேற்றம், ஷிப் லைன்(Zipline) போன்ற சாகசங்களையும் செய்யலாம். படகு சவாரிக்கு கட்டணம்800 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.இந்தியாவில் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள மேகாலயா இயற்கையை பாதுகாப்பதில் பெறும் பங்கு வகிக்கிறது. உயிருள்ள மரத்தில் செய்யப்பட்ட பாலம் போன்று இங்குள்ள மக்கள் இயற்கையை இயற்கையோடு வாழ முயற்சிப்பது மிகவும் அழகாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News