மீனவர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் நலவாரிய உறுப்பினர்கள் தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
விருதுநகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் (NFDP) -என்ற இணையதளத்தில் பதிவு செய்யக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.மீனவர் குழு விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் (GAIS) மூலம் வழங்கப்படும் நிவாரணத் தொகை பெற்றிட தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் (NFDP) பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து உறுப்பினர்களும் அருகாமையிலுள்ள இ-சேவை மையம் மற்றும் CSC கணினி மையங்களை அணுகி தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் (NFDP) பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், (பழைய கட்டிடம் இரண்டாவது தளம்) விருதுநகர் - 626 001. தொலைபேசி எண்: 04562-244707 என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply