25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அலங்கார மீன்வளர்ப்பு தொடர்பான பட்டறிவு பயண வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அலங்கார மீன்வளர்ப்பு தொடர்பான பட்டறிவு பயண வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (04.09.2024) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை  மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து  மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அலங்கார மீன்வளர்ப்பு குறித்து, தொழில்நுட்ப வளர்ப்பு முறைகளை அறிந்து கொள்ளும் வகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்கார மீன் வளர்ப்பு பண்ணைகளை பார்வையிட்டு பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பட்டறிவு பயண வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S,  அவர்கள்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அலங்கார மீன் வளர்ப்பு பிரபல பொழுதுபோக்காக கருதப்பட்ட நிலையில் தற்போது வளர்ந்து நன்கு லாபம் தரும் தொழிலாக மாறி உள்ளது.  இத்தொழில் ஏற்றுமதி துறையிலும் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் குறிப்பாக பெண்கள் தங்களது வீட்டிற்கு அருகாமையில் வண்ண மீன் வளர்த்து லாபம் அடையலாம்.மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வீட்டிற்கு அருகாமையில் 300 சதுர அடியில் அலங்கார மீன் வளர்ப்பு மேற்கொள்ள மகளிர்களுக்கு1.8 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. பெண்கள் வீட்டில் இருந்தவாறு அலங்கார மீன் வளர்ப்பு மேற்கொண்டு மாதம் ரூபாய் 15,000/ வரை சம்பாதிக்கலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் அலங்கார மீன் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் அலங்கார மீன் வளர்ப்பு குறித்து தொழில்நுட்ப வளர்ப்பு முறைகளை அறிந்து கொண்டு, அலங்கார மீன் வளர்ப்பில் பெண்கள் ஈடுபடும் வகையில் விருதுநகர் மாவட்ட  மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களை மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்கார மீன் வளர்ப்பு  பண்ணைகளை நேரில் சென்று பார்வையிட்டு மீன் வளர்ப்பு குறித்து அறிந்து கொள்ள ஏதுவாக இன்று; அலங்கார மீன் வளர்ப்பு குறித்த பட்டறிவு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இப்பயிற்சியில் முதற்கட்டமாக  விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 50 மகளிர் சுய உதவி குழு  உறுப்பினர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, இணை இயக்குநர்ஃதிட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு. ஜார்ஜ் மைக்கேல் ஆன்டனி, விருதுநகர்  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை  உதவி இயக்குனர் திரு.கு.இராஜேந்திரன், உதவி திட்ட அலுவலர் திருமதி.வனிதா, மீன்வள ஆய்வாளர்கள் திருமதி அம்சா காந்தி மற்றும்  திருமதி சுபானா, மகளிர் சுய உதவி உறுப்பினர்கள் மற்றும்  அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News