கடுமையான குளிர்காலத்தில் இருந்து மக்களை பாதுகாக்க அவசரகால தங்குமிடம் .
கடுமையான குளிர்காலத்தில் இருந்து மக்களை பாதுகாக்க அவசரகால தங்குமிடமாக செயல்படும். நீர் மற்றும் காற்று புகா தன்மையுடன் 2 நபர்கள் வரை இதில் தங்க ,மரம் மற்றும் இரும்பு கலவையால் ஆன இது, உறைபனி காலத்தில் மக்களை பாதுகாக்கும்.. இவை நிரந்தர வீடுகளுக்கு மாற்றாக இல்லாவிட்டாலும், அவசரகாலங்களில் தங்குமிடங்களாக செயல்படு கின்றன. 2020-ம் ஆண்டில் ஒரு முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது ஜெர்மனியின் பல பகுதிகளுக்கு விரிவடைந்துள்ளது. உணவு, உடை, இருப்பிடம் மனிதனின் அடிப்படை தேவைகளாகும். வீடு இல்லாதவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் ,குளிர்காலம் மற்றும் மழைக் காலத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மிக அதிகம். இதை கருத்தில் கொண்ட ஜெர்மனி அரசாங்கம் பாதுகாப்பு மற்றும் தனி உரிமையை வழங்க சிறிய, சூரிய சக்தியில் இயங்கும்கூடு வடிவிலான தங்குமிடங்களை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
0
Leave a Reply