25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


கண்மாய்களில் இலவசமாக களிமண் மற்றும் வண்;டல் மண் எடுக்க அனுமதி பெற்ற விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள்  முறைகேடு மற்றும் விதிமீறல்கள் இன்றி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கண்மாய்களில் இலவசமாக களிமண் மற்றும் வண்;டல் மண் எடுக்க அனுமதி பெற்ற விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் முறைகேடு மற்றும் விதிமீறல்கள் இன்றி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

விருதுநகர் மாவட்டத்தில்,  அரசாணை எண்.14, இயற்கை வளங்கள் (எம்;.எம்.சி.1) துறை, நாள்:12.06.2024-ன்படி, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் கட்டுப்பாட்டில் உள்ள 284 கண்மாய்களில் விவசாயிகள் விவசாய பயன்பாட்டிற்கும் மற்றும் மண்பாண்டத் தொழில்களுக்கும் இலவசமாக களிமண் (Clay)  மற்றும் வண்;டல் மண் (Silt)  எடுக்க சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மூலம் இணைய வழியாக அனுமதி வழங்கப்பட்டுவருகிறது.இத்திட்டத்தில் நாளது தேதிவரை 1312 விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். கண்மாய்களில் களிமண் மற்றும் வண்டல் மண் எடுப்பதைக் கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட அளவில் துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் நிலையில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மேற்படி திட்டத்தினை முறைகேடாக பயன்படுத்தியதாக இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வட்டங்களில் தலா ஒரு வழக்கு வீதம் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆறு (06) வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி திட்டமானது விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர் பயன்பெறும் வகையில் சீறிய நோக்கத்தோடு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட திட்டமாகும். இதில் முறைகேடு மற்றும் விதிமீறல்கள் இன்றி விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News