25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


இறகுகள்,பறவைகளின் உடலில் முக்கிய அங்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இறகுகள்,பறவைகளின் உடலில் முக்கிய அங்கம்.

இறகுகள்,பறவைகளின் உடலில் தோன்றும் புரதப்பொருட்களால் உருவாகுபவை .

நூற்றுக்கணக்கான இறகுகளால் உருவானவை தான் இறக்கைகள்.

ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை இறகுகளைக் கொண்ட பறவைகள் இருக்கின்றன.

இறகின் நடுவில் உறுதியான தண்டு போன்ற அமைப்பு இருக்கும். அந்தத் தண்டின் இரண்டு பக்கங்களிலும் சிறிய நுண் எலும்புகள் காணப்படும்.

நுண் எலும்புகளுக்கு இடையில் சிறிய ஓட்டை உடைய அமைப்புகள் உள்ளன. இவை பறவையை பல வகைகளில் பாதுகாக்கின்றன.

நடுப்பகுதியில் இரண்டு பக்கமும் சமமாக இருப்பவை வால் இறகுகள் என்று அழைக்கப்படுகின்றன.

பறவைகளை வெப்பத்திலிருந்து காப்பாற்ற, பறவையின் உடலைச் சுற்றி கீழ் இறகு என்ற அமைப்பு உள்ளது.

ஆந்தை போன்ற பறவைகளுக்கு இரையின் ஒலியை ,சத்தமாக கேட்பதற்கு இறகுகள் உதவுகின்றன.

பென்குயின் போன்ற பறவைகளுக்கு பனிச்சறுக்கு ,செய்வதற்கு இறகுகள் உதவுகின்றன.

நீரில் மூழ்கி வேட்டையாடும் பறவைகளுக்கு, இறகுகள் தேவைப்படுகின்றன.

வளர்ந்த பறவைகள் தங்கள் இறகுகளை கோடைக் காலத்தில் உதிர்த்து, புதிய இறகுகளை வளர்க்க ஆரம்பிக்கும்.

குளிர்காலம் வரும் போது பறவைகளை பாதுகாக்க இறகுகள் அவசியம் என்பதால், குளிர்காலத்துக்குள் புதிய இறகு உருவாகிவிடும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News