பனிக்கட்டிகளாக மாறிய உறைந்த ஆறுகள் பனிப்பாறைகள் ஆகும்.
பனிப்பாறைகள் என்பது பனிக்கட்டிகளாக மாறிய உறைந்த ஆறுகள் ஆகும். ஆண்டு முழுவதும் பனி ஒரே பகுதியில் இருக்கும் போது பனிப்பாறைகள் என்ற பெரிய அளவிலான திட வடிவ படிகமாக உருவாக தொடங்குகின்றன. ஒவ்வொரு ஆண்டும், புதிய பனி அடுக்குகள் முந்தைய அடுக்குகளை புதைத்து சுருங்க வைக்கின்றன. சிறிய ஐஸ் துண்டுகள் போல உருவாகும் பனிப்பாறைகள் 100 ஆண்டுகளில் மலை போல் மிகப்பெரிய அளவை எட்டுகிறது.
பனிப்பாறைகள் அனைத்து வடிவங்களிலும், அளவிலும் காணப்படுகின்றன. ஐஸ்-க்யூப் அளவிலான துண்டுகள் முதல் ஒரு சிறிய நாட்டின் அளவிலான பனித்தீவுகள் வரை உள்ளன. பனிப்பாறை என்ற சொல் 16 அடி விட்டம் கொண்ட பெரிய பனித் துண்டுகளை குறிக்கிறது. பெர்கிபிட்ஸ் மற்றும் க்ரோலர்ஸ் என்று அழைக்கப்படும் சிறிய பனிப்பாறைகள், கப்பல்களுக்கு மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் நீரில் அமிழ்ந்து கிடக்கும் இவற்றை கண்டறிவது கடினம். வடக்கு அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிக் கண்டத்தை சுற்றியுள்ள குளிர்ந்த நீர்நிலைகளில் தான் பூமியில் உள்ள பெரும்பான்மையான பனிப்பாறைகள் காணப்படுகின்றன.
இந்த பனிப்பாறைகள் அதன் நீட்சியாக பனி படலங்களை தோற்றுவிக்கின்றன. பனிப்படலம் என்பது நிலத்தில் அமைந்து 50,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவி காணப்படும் மிகப்பெரிய உறைபனி ஆகும். இப்போது பூமியில் இரண்டு பனிப்படலங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று உலகின் மிகப்பெரிய தீவானகிரீன்லாந்தின்பெரும்பகுதியைஉள்ளடக்கியது, மற்றொன்று அண்டார்டிக் கண்டம் முழுவதும் பரவியுள்ளது.
0
Leave a Reply