25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


75 வயதிற்கு பிறகும் இதய அறுவை சிகிச்சை செய்யலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

75 வயதிற்கு பிறகும் இதய அறுவை சிகிச்சை செய்யலாம்.

மனிதரின் வயது அதிகரிக்கும்போது, ரத்த நாளங்கள், குறிப்பாக இதயத்துக்குச் செல்லும் கரோனரி ஆர்ட்டரிகள் மெல்ல மெல்லக் கொழுப்பு மற்றும் கால்சியம் அடைப்புகள் மூலம் குறுகத் தொடங்குகின்றன. இதனால் இதயத்தின் தசைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் குறைந்து, மார்பு வலி (Angina) அல்லது இதயக்குழல் அடைப்பு (Myocardial infarction) போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

75 வயதுக்கு மேல் உள்ள நோயாளிகளுக்கு,பல ரத்தக்குழல் அடைப்புகள் காணப்படும்.

சில சமயங்களில் ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது ஸ்டென்ட் போட முடியாதவாறு கடினமான அல்லது நீண்ட அடைப்புகள் இருக்கும்.இதயத்தின் வெளிகொணரும் (Pumping) திறன் குறைந்திருக்கும்.இத்தகைய சூழலில், மருந்துகள் மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை போதாது. இதயத்துக்குப் புதிய வழி (Bypass) அமைத்து, ரத்த ஓட்டத்தைச் சீர் செய்ய, இதய அறுவை சிகிச்சை மிகச் சிறந்த தீர்வாகிறது.

வயது தடையல்ல

இன்றைய நவீன மருத்துவத் தொழில்நுட்பம், சிறந்த இதய அறுவை சிகிச்சை நுட்பங்கள் மற்றும் அவசரச் சிகிச்சைப் பிரிவு (ICU) பராமரிப்பு முன்னேற்றங்கள் காரணமாக, 75 வயதுக்கும் மேல் உள்ளவர்கள்கூட இதய அறுவை சிகிச்சையால் சிறப்பாகக் குணமடைகிறார்கள்.

நோயாளியின் உடல்நிலை, இதயத்தின் செயல்திறன் மற்றும் சுற்றியுள்ள உடல்நலக் குறைபாடுகள் ( சிறுநீரகம், நுரையீரல் முதலியவை )போன்றவற்றை மதிப்பீடு செய்த பின்சரியான தீர்மானம் எடுப்பதில் இதில் முக்கியமே. சுருக்கமாக சொன்னால் வயதுஓர் எண் மட்டுமே! இதயத்துக்குப் புதிய உயிர்கொடுக்கும் இதய அறுவை சிகிச்சை, 75 வயதுக்குப் பிறகும் பலருக்கு நம்பிக்கையையும் புதிய வாழ்க்கையையும்தருகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News