25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்   அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கஞ்சநாயக்கன்பட்டி ரேணுகாதேவி திருமண மண்டபத்தில்  (16.07.2024) நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில்,வருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இம்முகாமில்,  ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம், 32 பயனாளிக்கு ரூ.1,92,000/- மதிப்பிலான  இணையவழி பட்டாக்களையும், ஒரு பயனாளிக்கு இலவச தையல் இயந்திரத்தையும், 4 பயனாளிகளுக்கு ரூ.1,98,205/- மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 2 பயனாளிகளுக்கு வண்டல்மண் மற்றும் களிமண் எடுப்பதற்கான ஆணைகளையும், 6 பயனாளிகளுக்கு ரூ.5,00,000/- மதிப்பிலான சாலை விபத்து நிவாரணத்தொகையினையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்,  11 பயனாளிகளுக்கு உழவர் அட்டையினையும்,  6 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும், வேளாண்மைத்துறை மூலமாக 2 பயனாளிக்கு சிறுதானிய நுண்ணூட்டங்களையும், தோட்டக்கலைத்துறை மூலமாக ஒரு பயனாளிக்கும் பழக்கன்றுகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 6 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4,90,000/- மதிப்பிலான கடனுதவிகளையும் என மொத்தம் 71 பயனாளிகளுக்கு ரூ.13.80 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இம்முகாமில் கஞ்சநாயக்கன்பட்டி, ஆத்திப்பட்டி, செம்பட்டி மற்றும் புலியூரான் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பல்வேறு பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு உங்கள் அரசு.  உங்கள் அரசாங்கமாக இருப்பதன் காரணத்தினால் அமைச்சர் அவர்களும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும், 14 துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களும் உங்களைத் தேடி வந்திருக்கிறார்கள். பொதுமக்களிடையே குறைகளை கேட்டு, மனுவாக பெற்று செல்வது மட்டுமல்லாமல், அவற்றை உடனே கணினியில் பதிவு செய்து, அந்தந்த துறைக்கு அனுப்பப்பட்டு, அந்தத் துறையில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கையை எடுக்கிறார்கள். நீங்கள் கொடுக்கும் தகுதியான அனைத்து மனுவிற்கும் முறையான தீர்வுகள் வழங்கப்படும்.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுத்துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு இந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது.கடந்த முறை அருப்புக்கோட்டை பாலையம்பட்டியில் நடைபெற்ற முகாமில் சுமார் 800 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் பெறப்பட்ட 1.60 கோடி விண்ணப்பங்களில் மாதந்தோறும் சுமார் 1.15 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000- வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் விண்ணப்பித்தவர்களில் தகுதியான 1.48 இலட்சம் பயனாளிகளுக்கும் ரூ.1000- வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் தகுதியான நபர்கள் விடுபட்டிருந்தாலும் அவர்களுக்கும் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 தமிழ்நாடு அரசு விடியல் பயணம் மூலம் பெண்கள் இலவசமாக செல்லக்கூடிய ஒவ்வொரு பயணத்திற்கும் போக்குவரத்துக் கழகத்திற்கு கட்டணம் செலுத்தி வருகிறது. கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தின் மூலம் சுமார் ஒரு இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற அனைத்து தரப்பு மக்களுக்கு தேவையான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு மக்கள் நல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும் என தெரிவித்தார்.
மக்களுடன் முதல்வர் என்பது மக்களிடம் நேரடியாக சென்று அவர்களிடம் மனுக்கள் வாங்கக்கூடிய மிக முக்கியமான திட்டம். கடந்த  வாரத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டு, அதற்கு அடுத்தபடியாக நமது மாவட்டத்தில்  அமைச்சர் பெருமக்கள் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக ஒவ்வொரு கிராமப்புற பகுதிகளிலும் பொதுமக்களிடம் நேரடியாக சென்று மனுக்களை பெறக்கூடிய இந்த திட்டம் இன்று அருப்புக்கோட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் நடைபெறுகிறது.

பொதுமக்கள் மின்சாரம், பட்டா மாறுதல், குடும்ப அட்டை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டி இருக்கிறது.நமது மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரம் மற்றும் 11 ஒன்றியங்களில் இருந்து   மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் , மக்கள் தொடர்பு திட்ட முகாம், இணையவழி மனுக்கள், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்டவைகள் மூலமாகவும் அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோரிடம் நேரடியாகவும் ஏறத்தாழ வருடத்திற்கு 90,000 மனுக்கள் பெறப்படுகின்றன.இதில் பெரும்பாலான மனுக்கள் பொதுமக்கள் நேரடியாக சென்று மனுக்கள் அளிக்க வேண்டி இருக்கிறது. இவற்றை மாற்றி பொதுமக்களிடம் அனைத்து அரசு அலுவலர்களும் நேரடியாக சென்று மனுக்களை பெற்று அதற்கான தீர்வை வழங்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மனுக்கள் பெறுவதோடு மட்டுமல்லாமல் அதனை கணினியில் பதிவு செய்து அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தரப்படும் தீர்வுகள் திருப்திகரமாக இல்லாதபட்சத்தில் மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்புகளும் இதில் உள்ளது.

இப்படிப்பட்ட மிக முக்கியமான திட்டத்தின் மூலமாக நமது மாவட்டத்தில் அமைச்சர் பெருமக்கள் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொடர்ச்சியாக நான்கு அல்லது ஐந்து  கிராமங்கள் இணைந்து ஒரு மையமான இடத்தில் இந்த முகாம் நடத்தப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. நமது மாவட்டத்தில் மாநிலத்திலேயே அதிகமாக இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை ஆகிய  இரண்டு துறைகளின் மூலமாக புதிதாக நிலங்களை எடுத்தும், பட்டாக்களை இலவசமாக வழங்கி இருக்கின்றோம். தற்போதும் கூட 2000 பட்டாக்கள் புதிதாக வழங்குவதற்கு  அமைச்சர் பெருமக்கள் அவர்களால் அறிவுறுத்தப்பட்டு, அதற்குரிய பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும், கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் கிராமப்புறத்தில் உள்ள வீடுகளை சீரமைத்தல், புதிதாக கட்டுதல் பணிகளை செய்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முகாமின் மூலமாக வழங்கக்கூடிய மனுக்களுக்கு மிக விரைவாக தீர்வு காணப்படும் என்றும் அரசு அலுவலர்கள் அதை மிகுந்த கவனத்தோடு பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News