25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மக்கள் குறைதீர்க்கும் நாள்  கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களைபெற்றுக் கொண்டார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களைபெற்றுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் தலைமையில் (01.07.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமணஉதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களைபெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.  

அதனை தொடர்ந்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பாக மானியக் கோரிக்கையில் 26 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களைச் சார்ந்த 103 நகர்புற பயனாளிகளுக்கு தலா ரூ.4 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.4.12 கோடி மதிப்பிலான மானியத்தில் புதிதாக வீடு கட்டுவதற்கு பணி ஆணை ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, இன்று 5 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.20 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும் இளைஞர்களுக்கான நெசவுப்பயிற்சி திட்டத்தின் கீழ்  பயிற்சி பெற்ற 20 பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பாக மண்பாண்டங்கள் செய்யும் குடும்பங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு தலா ரூ.21,470 வீதம் 15 பயனாளிகளுக்கு ரூ.3.22 இலட்சம் மதிப்பில் இலவச மின் விசை மண்பாண்ட சக்கரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்டவருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, உதவி இயக்குநர்(கைத்தறி மற்றும் துணிநூல் துறை) திரு.வெங்கடேசலு, உட்பட பல்வேறுதுறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News