புளிய விதையால் நுண்பிளாஸ்டிக் பிரச்சினைக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்கள்.
16 வயதான இந்திய மாணவர்கள் அவ்யானா மேத்தா, அரியானா அகர்வால் மற்றும் விவான் சாவ்ச்சாரியா ஆகியோர், கழிவுப் புளிய விதைகளில் இருந்து தயாரித்த ‘பிளாஸ் ஸ்டிக்’ என்ற தூள் மூலம் குடிநீரில் உள்ள நுண்பிளாஸ்டிக் துகள்களை எளிதில் அகற்றும் புதுமையான தீர்வை உருவாக்கியுள்ளனர்.
மின்சாரம் அல்லது விலையுயர்ந்த கருவிகள் தேவையில்லாத இந்த கண்டுபிடிப்புக்காக, அவர்கள் 2026-ம் ஆண்டு உலகின் முக்கிய சுற்றுச்சூழல் விருதுகளில் ஒன்றான ‘தி எர்த் பிரைஸ்’ விருதை வென்ற முதல் இந்தியக் குழுவாக சாதனை படைத்தனர். மேலும், நாடு முழுவதும் 8,000-க்கும் மேற்பட்டோருக்கு விழிப்புணர்வு பயிலரங்குகளையும் நடத்தியுள்ளனர்.
0
Leave a Reply