ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் போலி கணக்குகள் நீக்கம் உண்மையான பயணியரும் பாதிப்பு!
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர். சி.டி.சி., இணையதளத்தில், ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி உள்ளது. அதை பயன்படுத்துவதற்கு, இந்த இணையதளத்தில் தங்கள் முகவரியை பதிவு செய்து, கணக்கு துவங்க வேண்டும். அந்த ஐ.டி., மற்றும் கணக்கை பயன்படுத்தி தான், முன்பதிவு செய்ய முடியும்.
அதன்படி, மொத்த பயணியரில் 82 சதவீதம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். பெரும்பாலான ரயில்களில் முன் பதிவு துவங்கும் நாளில், 10 நிமிடத்துக்குள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன. இதனால், டிக்கெட் எடுக்க முடியாமல் பயணியர் வருகின்றனர். ஏமாற்றமடைந்து
மேலும், தட்கல் முன்பதிவு முறையிலும் முறைகேடு நடக்கிறது. அடிக்கடி தொழில்நுட்ப கோளாறும் ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என பயணியர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த புகார்கள் அடிப்படையில், 2.5 கோடி போலி கணக்குகளை இணையதளத்தில் இருந்து, ஐ.ஆர். சி.டி.சி., கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நீக்கியது.
இதில், உண்மையான பயனாளர்களின் கணக்குகளும் முடங்கி உள்ளன. இதனால் அவர்களால் 'ஆன்லைன்' டிக்கெட் முன் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
0
Leave a Reply