25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் போலி கணக்குகள் நீக்கம் உண்மையான பயணியரும் பாதிப்பு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் போலி கணக்குகள் நீக்கம் உண்மையான பயணியரும் பாதிப்பு!

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர். சி.டி.சி., இணையதளத்தில், ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி உள்ளது. அதை பயன்படுத்துவதற்கு, இந்த இணையதளத்தில் தங்கள் முகவரியை பதிவு செய்து, கணக்கு துவங்க வேண்டும். அந்த ஐ.டி., மற்றும் கணக்கை பயன்படுத்தி தான், முன்பதிவு செய்ய முடியும்.

அதன்படி, மொத்த பயணியரில் 82 சதவீதம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். பெரும்பாலான ரயில்களில் முன் பதிவு துவங்கும் நாளில், 10 நிமிடத்துக்குள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன. இதனால், டிக்கெட் எடுக்க முடியாமல் பயணியர் வருகின்றனர். ஏமாற்றமடைந்து

மேலும், தட்கல் முன்பதிவு முறையிலும் முறைகேடு நடக்கிறது. அடிக்கடி தொழில்நுட்ப கோளாறும் ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என பயணியர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த புகார்கள் அடிப்படையில், 2.5 கோடி போலி கணக்குகளை இணையதளத்தில் இருந்து, ஐ.ஆர். சி.டி.சி., கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நீக்கியது.

இதில், உண்மையான பயனாளர்களின் கணக்குகளும் முடங்கி உள்ளன. இதனால் அவர்களால் 'ஆன்லைன்' டிக்கெட் முன் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News