25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


கச்சா எண்ணெய் இல்லை என்றால் உலகின் இயக்கம் நின்று விடும் என்ற அளவுக்கு அதன் தாக்கம் உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கச்சா எண்ணெய் இல்லை என்றால் உலகின் இயக்கம் நின்று விடும் என்ற அளவுக்கு அதன் தாக்கம் உள்ளது.

கச்சா எண்ணெய் என்பது பூமியின் குறிப்பிட்ட ஆழத்தில் உள்ள பாறைகளில் இயற்கையாக கிடைக்கும் திரவ எரிபொருள் ஆகும். இதில் இருந்துதான் பெட் ரோல், டீசல் போன்றவை பிரித்து எடுக்கப்படுகின்றன. அதாவது, சுத்திகரிப்பு நிலையங்களில் 400 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் பிரித்து எடுக்கும் நடைமுறையை செய்கிறார்கள். அதன் மூலம் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை கிடைக்கின்றன . பெட்ரோல்ல ட்ரோல், டீசல், எரிவாயுவை தரும் கச்சா எண்ணெய் இல்லை என்றால் உலகின் இயக்கம் நின்று விடும் என்ற அளவுக்கு அதன் தாக்கம் உள்ளது

இதில் இருந்துரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பிளாஸ்டிக், பாலிமர், நைலான், சோப்பு என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்ரோலிய துணை பொருட்கள் தயாராகின்றன. வாசனை திரவியங்கள் மற்றும் அழகு சாதன பொருட்களின் தயாரிப்பில் கூட பெட்ரோலிய பொருட்கள் கலந்துள்ளன. உலகின் பல்வேறு தொழில்கள் கச்சா எண்ணெயை நம்பி இருக்கின்றன .

வெனிசுலா, ரஷியா போன்ற நாடுகளில் கச்சா எண்ணெய் வளம் அதிகம் உள்ளது. இதே போல் மத்தியகிழக்கு வளைகுடா நாடுகளிலும் கச்சா எண்ணெய் வளம் அதிகமாக உள்ளது. ஈரான்நாட்டில் முதல் வணிக எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பக்ரைன்உள்பட குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார் போன்றவற்றில் பெருமளவு எண்ணெய் உற்பத்தி தொடங்கியது. இந்த நாடுகள் இன்றைக்கு உலகின் மிகப்பெரிய எண் ணெய் ஏற்றுமதி நாடுகளாக உள்ளன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News