கச்சா எண்ணெய் இல்லை என்றால் உலகின் இயக்கம் நின்று விடும் என்ற அளவுக்கு அதன் தாக்கம் உள்ளது.
கச்சா எண்ணெய் என்பது பூமியின் குறிப்பிட்ட ஆழத்தில் உள்ள பாறைகளில் இயற்கையாக கிடைக்கும் திரவ எரிபொருள் ஆகும். இதில் இருந்துதான் பெட் ரோல், டீசல் போன்றவை பிரித்து எடுக்கப்படுகின்றன. அதாவது, சுத்திகரிப்பு நிலையங்களில் 400 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் பிரித்து எடுக்கும் நடைமுறையை செய்கிறார்கள். அதன் மூலம் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை கிடைக்கின்றன . பெட்ரோல்ல ட்ரோல், டீசல், எரிவாயுவை தரும் கச்சா எண்ணெய் இல்லை என்றால் உலகின் இயக்கம் நின்று விடும் என்ற அளவுக்கு அதன் தாக்கம் உள்ளது
இதில் இருந்துரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பிளாஸ்டிக், பாலிமர், நைலான், சோப்பு என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்ரோலிய துணை பொருட்கள் தயாராகின்றன. வாசனை திரவியங்கள் மற்றும் அழகு சாதன பொருட்களின் தயாரிப்பில் கூட பெட்ரோலிய பொருட்கள் கலந்துள்ளன. உலகின் பல்வேறு தொழில்கள் கச்சா எண்ணெயை நம்பி இருக்கின்றன .
வெனிசுலா, ரஷியா போன்ற நாடுகளில் கச்சா எண்ணெய் வளம் அதிகம் உள்ளது. இதே போல் மத்தியகிழக்கு வளைகுடா நாடுகளிலும் கச்சா எண்ணெய் வளம் அதிகமாக உள்ளது. ஈரான்நாட்டில் முதல் வணிக எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பக்ரைன்உள்பட குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார் போன்றவற்றில் பெருமளவு எண்ணெய் உற்பத்தி தொடங்கியது. இந்த நாடுகள் இன்றைக்கு உலகின் மிகப்பெரிய எண் ணெய் ஏற்றுமதி நாடுகளாக உள்ளன.
0
Leave a Reply