25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

கால்நடைகளுக்கு உயர் வெப்பத்தால் ஏற்படும் அயற்சியே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகமாக உமிழ்நீர் வடிதல், அதிகமாக தண்ணீர் பருகுதல், பகலில் குறைவாக தீவனம் உட்கொள்ளுதல், நிழலில் தஞ்சம் புகுதல், வாயைத் திறந்த நிலையில் வேகமாக சுவாசித்தல் போன்றவை வெப்ப அயற்சியின் அறிகுறிகளாகும்.

மேய்ச்சல் நேரத்தில் மாற்றம் :-

வெப்ப அயற்சியில் இருந்து கால்நடைகளைக் காப்பாற்றுவதற்கு, கால்நடைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் வெயிலுக்கு முன்பு மேய்ச்சலுக்கு விட வேண்டும்.  காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்க வேண்டும்.

கறவை மாடுகள் பராமரிப்பு:-

கறவை மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறையாவது தண்ணீர் கொடுக்க வேண்டும்.  தண்ணீரின் மீது கலப்புத்தீவனத்தை சிறிதளவு தூவும் போது கால்நடைகள் அதிக தண்ணீர் குடிக்கும்.  தாது உப்புக்கலவை, வைட்டமின்கள் கொடுப்பதன் மூலம் வெப்ப அயற்சி அறிகுறிகள் குறைவதுடன் பால் உற்பத்தி குறையாமல் இருக்கும். நீர்த் தெளிப்பான்கள், மின் விசிறிகளை கொட்டகைகளில் பயன்படுத்துவதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்கலாம். அதிகமாக பசுந்தீவனம் கொடுப்பதோடு உலர் தீவனத்தை பகலில் குறைவாகவும் இரவில் அதிகமாகவும் கொடுக்கலாம்.

கோழிகள் பராமரிப்பு:-

கோடை காலத்தில் கோழிகளுக்கு விடியற்காலைப் பொழுதிலும் இரவிலும் தீவனம் அளிக்க வேண்டும்.  எல்லா நேரங்களிலும் சுத்தமான குளிர்ந்த குடிநீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  குடிநீரில் வைட்டமின்கள் பி-காம்ப்ளக்ஸ், குளுக்கோஸ் கலந்து கொடுக்கலாம்.  அதிக இடவசதி உள்ள இடத்தில் உயரமான கூரை அமைத்து குறைவான எண்ணிக்கையில் கோழிகளை பராமரிக்க வேண்டும்.

ஆடுகள் பராமரிப்பு:-

ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 12 லிட்டர் சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும்.  தடுப்பூசிகளை உரிய காலத்தில் போட வேண்டும்.  ஆடுகளுக்கு பட்டிகளில் தாது உப்புக்கட்டிகளை கட்டுவதன் மூலம் சோடியம், பொட்டாசியம் முதலிய சத்துக்கள் எளிதாக கிடைக்கும்.  புரதச்சத்து மிக்க வெல்வேல் மற்றும் கருவேல உலர் காய்களை ஆடுகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

செல்லப்பிராணிகள் பராமரிப்பு:-

செல்லப்பிராணிகளை காரில் உள்பகுதிகளில் அடைத்து வைப்பதையும் நேரடியாக வெயில்படுமாறு உலாவ விடுவதையும் தவிர்க்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவமனை, மருந்தகங்களில் கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகள், தாது உப்புக்கலவைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.  கால்நடை மருந்தகங்களில் சிகிச்சைக்கு வரும் கால்நடைகளுக்கு குடிநீர் வழங்க உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்புடன் தேவையான ஏற்பாடு செய்ய கால்நடை உதவி மருத்துவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுமாயின் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸை 1962 என்ற எண்ணில் அழைத்து மருத்துவ உதவி பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News