சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர்
தாயின் கருவில் இருந்து வராததால், இந்த அவதாரத்தை‘அவசரத் திருக்கோலம்‘ என்பர்.‘நாளை என்பது நரசிம்மனுக்கு கிடையாது’ என்று குறிப்பிடுவர். திருமாலின் கையிலுள்ள சக்கரத்தைசக்கரத்தாழ்வார்' என்பர். பக்தர்களின் துன்பம் தீர்க்க திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது.சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக நீங்கும் என்பது ஐதீகம். பக்தனான பிரகலாதனைக் காக்க திருமால் நரசிம்மராக அவதரித்தார்..துன்பத்தில் இருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன் உண்டாக சக்கரத்தையும், நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது சிறப்பு.இதன் அடிப்படையில் கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புவர்.
ஸ்ரீமகாவிஷ்ணுவின் எல்லா அவதாரங்களிலும் உடன் இருந்து தீமைகளை அழித்தவர் சுதர்சனர் எனும் சக்கரத்தாழ்வார். காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கு சம்ஹாரத்தில் உதவி புரியும் திருவடிவே சுதர்சனர். எனவே இவரை வணங்கினால் எல்லா அச்சங்களும் நீங்கி நலமான வாழ்வைப் பெறலாம் என்பது நம்பிக்கை. நித்ய சூரியான சுதர்சனர் வாழ்வில் ஒளி தருபவர் வராக அவதாரத்தில் மூக்குப் பகுதியில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார். நரசிம்ம அவதாரத்தில் நரசிம்மரின் கை நகங்களாக இருந்தவர் ஸ்ரீசுதர்சனர். வாமன அவதாரத்தில் சுக்கிராச்சாரியாரின் கண்களைக் குத்தி பின்னமாக்கியவர் தர்ப்பை வடிவத்தில் இருந்த இவர்தான் என்கிறது புராணம். ராம அவதாரத்தில் அவரது வில்லில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார். பரசுராமர் அவதாரத்தில் அவரது ஏர்க் கலப்பையாக ஸ்ரீசுதர்சனர் இருந்தார். கிருஷ்ண அவதாரத்தில் சக்கரமாக இருந்து காத்தார்.
மனம் ஒன்றி வழிபடும் பக்தர்களுக்கு எல்லா காலமும் அபயம் அளிக்கும் ஸ்ரீசுதர்சன சக்கரம், அச்சங்களை அகற்றக்கூடியது. ஸ்ரீசுதர்சனரை வழிபடுவதும் ஸ்துதி பாடுவதும் சிறப்பான பலன்களைத் தரும் என்பார்கள். சனிக்கிழமை காலையில் சுதர்சனரை சூரிய வடிவாகவே எண்ணி வழிபடலாம். அன்றைய சூரிய நமஸ்காரத்தை சுதர்சன ஆராதனையாக செய்யலாம்.
0
Leave a Reply