25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர்

தாயின் கருவில் இருந்து வராததால், இந்த அவதாரத்தை‘அவசரத் திருக்கோலம்‘ என்பர்.‘நாளை என்பது நரசிம்மனுக்கு கிடையாது’ என்று குறிப்பிடுவர். திருமாலின் கையிலுள்ள சக்கரத்தைசக்கரத்தாழ்வார்' என்பர். பக்தர்களின் துன்பம் தீர்க்க திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது.சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக நீங்கும் என்பது ஐதீகம். பக்தனான பிரகலாதனைக் காக்க திருமால் நரசிம்மராக அவதரித்தார்..துன்பத்தில் இருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன் உண்டாக சக்கரத்தையும், நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது சிறப்பு.இதன் அடிப்படையில் கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புவர்.

ஸ்ரீமகாவிஷ்ணுவின் எல்லா அவதாரங்களிலும் உடன் இருந்து தீமைகளை அழித்தவர் சுதர்சனர் எனும் சக்கரத்தாழ்வார். காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கு சம்ஹாரத்தில் உதவி புரியும் திருவடிவே சுதர்சனர். எனவே இவரை வணங்கினால் எல்லா அச்சங்களும் நீங்கி நலமான வாழ்வைப் பெறலாம் என்பது நம்பிக்கை. நித்ய சூரியான சுதர்சனர் வாழ்வில் ஒளி தருபவர்  வராக அவதாரத்தில் மூக்குப் பகுதியில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார். நரசிம்ம அவதாரத்தில் நரசிம்மரின் கை நகங்களாக இருந்தவர் ஸ்ரீசுதர்சனர். வாமன அவதாரத்தில் சுக்கிராச்சாரியாரின் கண்களைக் குத்தி பின்னமாக்கியவர் தர்ப்பை வடிவத்தில் இருந்த இவர்தான் என்கிறது புராணம். ராம அவதாரத்தில் அவரது வில்லில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார். பரசுராமர் அவதாரத்தில் அவரது ஏர்க் கலப்பையாக ஸ்ரீசுதர்சனர் இருந்தார். கிருஷ்ண அவதாரத்தில் சக்கரமாக இருந்து காத்தார்.

மனம் ஒன்றி வழிபடும் பக்தர்களுக்கு எல்லா காலமும் அபயம் அளிக்கும் ஸ்ரீசுதர்சன சக்கரம், அச்சங்களை அகற்றக்கூடியது. ஸ்ரீசுதர்சனரை வழிபடுவதும் ஸ்துதி பாடுவதும் சிறப்பான பலன்களைத் தரும் என்பார்கள். சனிக்கிழமை காலையில் சுதர்சனரை சூரிய வடிவாகவே எண்ணி வழிபடலாம். அன்றைய சூரிய நமஸ்காரத்தை சுதர்சன ஆராதனையாக செய்யலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News