25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின்  கீழ் 100 அரசுப்பள்ளி மாணவர்கள் திருநெல்வேலியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகம் மற்றும் திருநெல்வேலி அறிவியல் மையம் ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 அரசுப்பள்ளி மாணவர்கள் திருநெல்வேலியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகம் மற்றும் திருநெல்வேலி அறிவியல் மையம் ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், (24.07.2024) அறிவியல் களப்பயணத்தில் விருதுநகர் கல்வி மாவட்டத்தில் பயிலும் 100 அரசுப்பள்ளி மாணவர்கள் திருநெல்வேலி மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகம் மற்றும் திருநெல்வேலி அறிவியல் மையம் ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு  சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்., மாவட்டத்தில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகம், தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஸ்டெம் அறிவியல் பூங்கா, பந்தல்குடியில் உள்ள ராம்கோ சுற்றுசூழலியல், கொடைக்கானலில் சேக்ரட் ஹாட் இயற்கை அறிவியில் அருங்காட்சியகம், கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடர்ச்சியாக கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று 100 அரசுப்பள்ளி மாணவர்கள் திருநெல்வேலியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகம் மற்றும் திருநெல்வேலி அறிவியல் மையம் ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.அதன்படி, இந்த அறிவியல் பயணத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் காம்ப்ளக்ஸ் (ஐபிஆர்சி) என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மையமாகும்.இந்திய விண்வெளி திட்டத்திற்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்ப தயாரிப்புகளை செயல்படுத்த தேவையான வசதிகளுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.இது இஸ்ரோவின் திரவ உந்து அமைப்பு மையங்களில் உருவாக்கப்படும் உந்துவிசை அமைப்புகள் மற்றும் நிலைகளை சோதனை செய்தல், அசெம்பிள் செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருவது குறித்தும், இஸ்ரோவின் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்களின் அனைத்து திரவ, கிரையோஜெனிக் மற்றும் செமிக்ரையோஜெனிக் நிலை மற்றும் இயந்திரம் தொடர்பான சோதனைகள் இங்கு மேற்கொள்ளப்படுவது குறித்தும்,

திருநெல்வேலி அறிவியல் மையத்தில் அறிவியல் நிகழ்வுகள், டைனோசர் பார்க், மின்னணுவியல், இயற்பியல் பிரிவு, பல இயற்பியல் சார்ந்த நுணுக்கங்கள், பறவைகள் மற்றும் உயிரினங்கள், பல அறிவியல் சார்ந்த விசயங்கள், எலக்ட்ரானிக்ஸ் பற்றிய அறிவியல் ஜாலங்கள், மாய கண்ணாடி பகுதி, கோளரங்கம் என்ற வானியலை உங்கள் கண் முன்னே கொண்டு வருவது போன்ற அமைப்பு, சூரியன் மற்றும் பிற கோள்களை அருகில் இருந்து பார்ப்பது போன்ற அமைப்பு, திரையில் பார்க்கும் காட்சியை கண்ணுக்கு அருகில் கொண்டு வரும் முப்பரிமாண திரையரங்கம் ஆகியவற்றையும் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள், தொழில் நுட்பங்கள், பயன்கள் குறித்து அறிந்து கொண்டோம்.இந்த அறிவியல் களப்பயணம் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த பல்வேறு தகவல்கள் குறித்து அறிந்து கொள்ளவும், எதிர்காலத்தில் எங்களுடைய உயர் கல்வி மற்றும் வாழ்க்கைக்கான இலக்கை நிர்ணயிப்பதற்கான ஒரு தூண்டுகோலாகவும், வழிகாட்டியாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.இந்த அறிவியல் பயணத்தை ஏற்பாடு செய்து, எங்களை அழைத்து வந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News