இதய நோய்க்கு ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு பழங்களைச் சாப்பிட்டுவிட்டுத் தோலைக் குப்பையில் போட்டுவிடுகிறோம்.ஒருசிலர் அதில் குழம்புசெய்வது, காயவைத்துப் பொடி செய்து, தோல் மீது பூசுவது என்று பயன் படுத்துவர். ஆனால், உலகம் முழுதும் பெரும் பாலும் இந்தத் தோல், கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது அல்லது வீணாக்கப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்கா வின் ப்ளோரிடா பல்கலை மேற்கொண்ட ஆய் வில், ஆரஞ்சுத் தோலில் இருந்து இதய நோய்க்கான மருந்தை எடுக்க முடி யும் எனக் கண்டறியப் பட்டுள்ளது.நம் குடலில் வாழும் சில பாக்டீரியா, நாம் உண்ணும் உணவைச் செரிக்க உதவும் போது, டிரைமெதிலமைன் என் ஆக்சைட் (Trimethylamine N oxide - TMAO) வேதிப் பொருளை உரு வாக்குகிறது. இது இதய நோய்க்குக் காரணமாகிறது. நம் உடலில் இந்த வேதிப் பொருளின் அளவைக் கொண்டு இதய நோய் வரப்போவதை முன்கூட் டியே கண்டறிய முடியும்.
ஆரஞ்சு தோலில் உள்ள பெருலோ யில்புட்ரெஸ்சைன்( Feruloyputrescine ) எனும் ஒரு கலவை டிரைமெதி லமைன் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது என்ப தைக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.ஆய்வுகளை மேம் படுத்தி, ஆரஞ்சு தோலில் இருந்து பெருலோயில்புட் ரெஸ்சைனை எளிதாகப் பிரித்தெடுப்பதன் வாயிலாக இதய நோய்க்கான புதிய மருந்தை உருவாக்க முடியும் என்பதுவிஞ்ஞானிகளின் கருத்து.
0
Leave a Reply