25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தலைமையில் (08.07.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.  

இக்கூட்டத்தில் விண்ணப்பம் அளித்த மனுதார்களுக்கு முஸ்லிம் மகளிர் உதவி சங்கம்  சார்பில், மாவட்ட  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 90 பயனாளிகளுக்கு தலா ரூ.8300/- மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ.12,500/- வீதம் என மொத்தம் 91 பயனாளிகளுக்கு ரூ.7,59,500/- இலட்சம்  மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும், 28 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் உதவித்தொகைகளையும் மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ.20,000/- வீதம் என மொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூ.3,00,000/- இலட்சம் மதிப்பில் உதவித்தொகைக்கான காசோலைகளையும்,மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவி சங்கம் சார்பில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 41 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000 வீதம் மற்றும் 12 பயனாளிகளுக்கு ரூ.15,000/- வீதம் என மொத்தம் 53 பயனாளிகளுக்கு ரூ.10,00,000/- மதிப்பில் உதவித்தொகைக்கான காசோலைகளையும்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.72,000 வீதம் இலவச வீட்டுமனை பட்டாக்களையும் மற்றும் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.60,000/- வீதம் என 7 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.4,68,000/- மதிப்பலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும், மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவினையும்  என ஆக மொத்தம் 181 பயனாளிகளுக்கு ரூ.25,27,500 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News