25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மிளகு சூப்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மிளகு சூப்

சித்த மருத்துவத்தில் மிளகு சிறப்பான இடம் வகிக்கிறது. மிளகு சேராத சித்த மருந்தே இல்லையெனலாம். காமாலை, இருதய நோய் இருமல், தொண்டை தொடர்பான நோய்கள், அஜீரணம், குளிர் காய்ச்சல் போன்ற நோய்களை குணமாக்குவதுடன் அன்றாட உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் மேற்சொன்ன நோய்கள் வராமலும் தடுக்கும்.

 

தேவையான பொருட்கள் -துவரம் பருப்பு - 50கிராம்,உப்பு - 2தேக்கரண்டி,மிளகு - 11/2 தேக்கரண்டி,

துவரம் பருப்பு -1தேக்கரண்டி,நெய் -1/4 தேக்கரண்டி,கறிவேப்பிலை ஈர்க்கு,புளி - சிறு எலுமிச்சையளவு,மிளகாய் வற்றல் - 4 ,

சீரகம் - 1/2 தேக்கரண்டி,தனியா - 1 தேக்கரண்டி,கடுகு - அரைக்கால் தேக்கரண்டி, தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை - ஒரு பாத்திரத்தில் ஐம்பது கிராம் துவரம் பருப்பைப் போட்டு தண்ணர் விட்டுக் குழைய வேக வைத்து எடுத்துதெளிவாக இறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு நீரில் புளியும், உப்பும் சேர்த்துக் கரைத்துக் கொதிக்க விட வேண்டும். புளிநீர் பாதியளவு சுண்டியதும், இறுத்து எடுத்து வைத்துள்ள துவரம் பருப்பு நீரைப் புளி நீரில் கொட்டவும்.'

மிளகாய்வற்றல், மிளகு, சீரகம், துவரம் பருப்பு1 தேக்கரண்டி தனியா ஆகிய அனைத்தையும் அம்மியில் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து சூப்பில் கொட்டவும்.நூரை கூடி வாசம் வரும்போது நெய்யில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சூப்பில் கொட்டி இறக்கி கொஞ்சம் நீர் தெளித்துக் கலக்கிப் பரிமாறவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News