செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம்.
குற்ற செயல்கள்அதிகம் உள்ள ராஜபாளையம் நகர் மேற்கே குடியிருப்புகள் பகுதிகளில் குற்ற செயல்களை கண்காணிக்க போலீஸ் செக் போஸ்ட் . ராஜபாளையம் மேற்கு பகுதியான செண்பகத்தோப்பு ரோடு, முடங்கியார் ரோட்டில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், ஆறு, வனப்பகுதி அமைந்துள்ளன.
சட்ட விரோத செயல்கள் அடிக்கடி நடைபெற்று வந்த இப்பகுதிகளில் வழிப்பறி, திருட்டு, மறியல், வனப் பகுதியில் இருந்து வன விலங்குகள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தல் நடைபெற்று வந்தன.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரச்னைகளை சரி செய்யவும், போக்குவரத்தை சீராக்கவும் காலதாமதம் ஆனது.
முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோடு பிரிவு பகுதியில் செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்க, செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் போலீஸ் செக்போஸ்ட் கூண்டு வைக்கப் பட்டுள்ளது, விரைவில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0
Leave a Reply