25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மூன்றாவது விருதுநகர் புத்தகத் திருவிழாவில் (01.10.2024) அன்று நடைபெறும் நிகழ்ச்சிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மூன்றாவது விருதுநகர் புத்தகத் திருவிழாவில் (01.10.2024) அன்று நடைபெறும் நிகழ்ச்சிகள்

மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, விருதுநகரில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024  முதல் 07.10.2024 வரை 11 நாட்களுக்கு காலை 10.00 மணி  முதல் இரவு 09.00  மணி வரை நடைபெறவுள்ள விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.

இப்புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள்  அமைக்கப்பட்டுள்ளன. இப்புத்தக அரங்கில், கலை, இலக்கியம், வரலாறு, சரித்திரம், சமூகம், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், உலக தலைவர்களினுடைய வரலாற்று பதிவுகள், குழந்தைகளுக்கு அறிவை வளர்ப்பதற்கு தேவையான புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம், தகவல் களஞ்சியம் (Encyclopedia), தமிழக  அரசினுடைய வேலைவாய்ப்புக்கான  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான (TNPSC Guide)  வழிகாட்டி புத்தகங்கள், IAS, IPS,  IFS-படிப்பிற்கான வழிகாட்டி புத்தகங்கள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பள்ளி புத்தகங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் ரூ.10/- முதல் ரூ.1000/- வரையிலான புத்தகங்கள் ஆயிரக்கணக்கான தலைப்பில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் ஒரே கூரையின் கீழ் குவிக்கப்பட்டுள்ளது.

  தொல்லியல் துறை மூலம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி, தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் மூலம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், மேற்கு தொடர்ச்சி மலை, அதில் வாழும் உயிரினங்கள் குறித்த கண்காட்சி அரங்கம், பழங்காலம் முதல் தற்போது வரை உள்ள நாணயங்கள் குறித்த கண்காட்சி மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய காப்பிய பூங்கா உள்ளிட்ட விளையாட்டு பகுதிகள் மற்றும் பல்வேறு வகையான உணவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும் மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்றாவது விருதுநகர் புத்தக திருவிழாவில் மேடைப் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள், கவிஞர்கள், முனைவர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய அரங்கு, கருத்தரங்கு மற்றும் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
 01.10.2024 அன்று திரு.பி.கே.பெரியமகாலிங்கம் அவர்கள் எழுதிய ரகசியம் என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும், நாவலாசிரியர் திருமதி அ.வெண்ணிலா அவர்கள்  “மரமும் மாதரும்” என்ற தலைப்பிலும், முதுநிலை உதவி ஆசிரியர் இந்து தமிழ் திசை நாளிதழ் கவிஞர் மு.முருகேஷ் அவர்கள் “குழந்தை இலக்கியத் தடத்தில்” என்ற தலைப்பிலும், கவிஞர் திருமதி கவிதா ஜவஹர் அவர்கள் “மண் பயனுறவேண்டும்” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

 02.10.2024 அன்று திரு.கா.சி.தமிழ்க்குமரன் அவர்கள் எழுதிய “மந்தைப் பிஞ்சை” என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும், எழுத்தாளர் திரு.சோ.தர்மன் அவர்கள் “மனிதர்களும் மரங்களும்” என்ற தலைப்பிலும், பேச்சாளர் திரு.பாரதிகிருஷ்ணகுமார் அவர்கள் தாயினும் சாலப்பரிந்து என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்ற உள்ளனர். மேலும் படைப்புலகில் பெண்கள் என்ற தலைப்பில் நடைபெறும் நேர்காணல் நிகழ்ச்சியில் எழுத்தாளர் சூ.பாமா, திருமதி ர.ரமாதேவி, திருமதி பிருந்தா ஜ.ராகவன் அவர்கள் ஆகியோர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர். 

எனவே, இப்புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென  மாவட்ட  ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S,  அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News