25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கம்பு கேழ்வரகு போர்ன்விடா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கம்பு கேழ்வரகு போர்ன்விடா

தேவையான பொருட்கள்- கம்பு 250 கிராம், கேழ்வரகு 100 கிராம், பொரிகட்டில் 50 கிராம், பாசிப்பருப்பு 100 கிராம், ஜீனி 250 கிராம், ஏலம் 10,கம்பு, கேழ்வரகு, பொரிகடலை, பாசிப்பருப்பு நான்கும் அரைத்தமாவு மொத்தமாக 2 டம்ளர் என்றால் ஜீனி 1 டம்ளர்.

செய்முறை -கம்பு, கேழ்வரகு இரண்டையும் நன்றாக சுத்தம் செய்து, உரலில் இட்டுக் குற்றி உமி நீக்கி முதல் நாள் மாலை 4 மணிக்கு தண்ணீரில் விட்டு ஊறவைத்து பின்பு வடிகட்டி, வெள்ளைத் துணியில் சுற்றி கட்டிவைத்துவிட வேண்டும். அதை எடுத்து நிழலிலேயே நன்றாக காய வைத்து அதனுடன், பொரிகடலையையும், பாசிப்பருப்பையும் (அதாவது பயறு அல்ல) லேசாக வறுத்து அதாவது கம்பு, கேழ்வரகு, பொரிகட்டில், பாசிப்பருப்பு நான்கையும் சேர்த்து கல் உரலில் இட்டு, உதிரியாக அரைக்க வேண்டும். முடியாதவர்கள் மிஷினிலும் அரைத்துக் கொள்ளலாம். இந்த மாவு 2 டம்ளர் இருந்தால் 1 டம்ளர் ஜீனி சேர்க்கவும். மிக்ஸி வைத்திருப்பவர்கள். மாவு, அரைத்த பின் ஜீனியை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். (ஏலக்காய் தேவைப்பட்டவர்கள சேர்த்துக் கொள்ளலாம்) இல்லையெனில் வேண்டாம். 

இதை ஒரு பாட்டிலில் அடைத்து குழந்தைகளுக்கு, உதிரியாகவோ, அல்லது தண்ணீர் சேர்த்து உருண்டையாகவோ அல்லது பால்மாதிரிகாய்ச்சியோ கொடுக்கலாம். மிக்க சத்துள்ள உணவு செய்து முடிக்கு முன்பே உங்கள் வீட்டில் போர்ன்விடா   வாசனை  மூக்கைத்துளைக்கும், ருசியோ, நாக்கில் தேன் ஊற்றெடுக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News