25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சம்பூர்ணதா அபியான் திட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சம்பூர்ணதா அபியான் திட்டம்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டாரம் கல்லூரணி ஊராட்சி, எஸ்.பி.கே.மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசின்; நிதி ஆயோக் அமைப்பின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட முன்னேற விழையும் வட்டாரமான திருச்சுழி வட்டாரத்தில் நிர்ணயிக்கப்பட்ட 6 இலக்குகளை அடைவதற்கான சம்பூர்ணதா அபியான் திட்டத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S அவர்கள்  (05.07.2024) தொடங்கி வைத்தார்.பின்னர், திருச்சுழி வட்டாரத்தில் இத்திட்டத்தின் கீழ் வகுக்கப்பட்டுள்ள காரணிகளான சுகாதாரம், ஊட்டச்சத்து, விவசாயம், மகளிர் மேம்பாடு உள்ளிட்டவைகளில் இலக்கினை அடைவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பொதுமக்கள்; தங்கள் பங்களிப்பை அளிக்கும் விதமாகவும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

தேசிய அளவில் முன்னேற விழைகிற மாவட்டங்களாக மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினால் 112 பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள்  தேர்வு செய்யப்பட்டு, 81 குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு, இலக்குகளை நிறைவேற்றும் விதமாக அதற்கான பணிகள் 2018 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான குறியீடுகளினுடைய இலக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து தற்போது தேசிய அளவில் 500 பின்தங்கிய வட்டாரங்கள் நிதி ஆயோக் அமைப்பின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு, அதில் தமிழகத்தில் 16 வட்டாரங்கள் முன்னேற விழையும் வட்டாரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் முன்னேற விழையும் வட்டாரமான திருச்சுழி வட்டாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 39 காரணிகளை குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு இலக்கினை அடைவதற்கான பணிகள்;; துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இதன் முதற்கட்டமாக சம்பூர்ணதா அபியான் திட்டத்தின் கீழ் விவசாயம், மருத்துவம், சுகாதாரம், ஊட்டச்சத்து, மகளிர் மேம்பாடு  ஆகிய துறைகள் தொடர்புடைய ஆறு காரணிகளை 100 சதவிகிதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஜூலை முதல் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்திட சம்பூர்ணதா அபியான் திட்டத்தின் கீழ் இன்று பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநில திட்டங்களை எல்லாம் சேகரித்து அனைத்து தரப்பு மக்கள், பெண்கள் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் என மக்களினுடைய நலனுக்காக திட்டங்களை எல்லாம் முழுமையாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் இன்று திருச்சுழி வட்டாரத்துக்குட்பட்ட பொது மக்களுக்கு ஆறு குறியீடுகள் முழுமை அடைய வைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.இந்த திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் மக்கள் பங்கேற்பும் இருக்க வேண்டும். கருவுற்ற மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். ஏனென்றால் மூன்று மாதத்துக்குள் பதிவு செய்யும் பொழுது தான் அவர்களிடத்தில் இருக்கக்கூடிய ஹீமோகுளோபின் அளவு, ஊட்டச்சத்து குறைபாடுகள் என அனைத்தையும் சரி செய்து, பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்கள் சரிசெய்ய முடியும்.பெண் குழந்தைகளுக்கு இரத்த சோகை தவிர்க்கும் வகையில், அவர்களுக்கான ஊட்டச்சத்துக்களை உறுதி செய்ய வேண்டும்.  இரும்புச்சத்து குறைபாடுகள் இருப்பின், முறையாக கண்டறிந்து, அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

  18 வயது முன்பாக குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி தவறாகும். அப்படி திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீதும், திருமணம் செய்து கொண்ட ஆணின் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்யப்படுகிறது. எனவே, குழந்தை திருமணத்தை அனைத்து பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். அவ்வாறு கண்டறியப்பட்டால் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஏறக்குறைய மூன்றில் ஒருவருக்கு கண்டிப்பாக இருக்கிறது. 2030- ல் உலகத்திலே அதிகமாக சர்க்கரை நோய் கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கு காரணம்  உணவு பழக்க வழக்கம். இரத்த அழுத்தம், நீரிழிவு என்பது ஒரு நோய் கிடையாது. உடல் செயலியில் இருக்கக்கூடிய ஒரு மாற்றம். முதலில் அதனை கண்டுபிடித்தது அதற்கென்று மருந்து மாத்திரைகள் எடுத்து கொள்ள வேண்டும். எனவே உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு 40 வயதிற்கு மேற்பட்டோர் வருடத்திற்கு இரண்டு முறை ரத்த அழுத்தத்தையும், சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பின்னர், விவசாயிகள் மண் பரிசோதனை செய்து, அதற்கு ஏற்றாற்போல் பயிர் செய்ய வேண்டும். மண்ணின் தன்மை, சத்துக்களுக்கு ஏற்ப உரம் இட வேண்டும்.  இதனால் மகசூல் அதிகமாக கிடைக்கிறது. எனவே, விவசாயிகள்  அனைவரும்  வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம்.நமது பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன. அந்த சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி அரசு வழங்குகிறது. அந்த நிதியை பெற்று அதன் மூலம்  தொழில் செய்து, தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் தொடங்குவதற்காக பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றனர். இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இந்த ஆறு குறியீடுகளை அடுத்து வரக்கூடிய மூன்று மாதங்களில் முழுமை அடைய செய்ய வேண்டும். இதற்காக வட்டார அளவில் உள்ள அலுவலர்களை தொடர்பு கொண்டு  அது குறித்து தெரிந்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், சம்பூர்ணதா அபியான் என்னும் முழுமையான இயக்கத்தின் கீழ், திருச்சுழி வட்டாரத்தில் முன்னேற்றம் காண்பதற்கு முழுமையான இயக்க பணிகளில் எனது பங்களிப்பை அளிப்பேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.பின்னர், சம்பூர்ணதா இயக்கத்தின் விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் துவக்கி வைத்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News