ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை முன் குளமாக தேங்கும் கழிவுநீர்.
ராஜபாளையம் நகர்பகுதியில் டெங்கு பாதிப்பை அடுத்து கழிவு நீர் தேக்கத் திற்கு தீர்வு காண்பதற்காக நகரின் நடுவே செல்லும் நெடுஞ்சாலையை கழிவு நீர் கடப்பதற்காக கிழக்கு பகுதியில் இருந்து நான்கு இடங்களில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரே உள்ள சாக்கடை தரைப்பாலம் 8 அடி ஆழத்தில் 6 அடி அகலம் தொட்டி போன்ற அமைப்புடன் உள்ளதால் பிளாஸ் டிக் உள்ளிட்ட கழிவுகள் இதில் குவியலாக தேங்கி நிற்கிறது.
மலையடிப்பட்டி குடி யிருப்புகள், வணிக நிறு வனங்கள், சிறு தொழிற் சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் தேங்கி வெளியேற முடியாமல் இருப்பதால் சுகாதாரக் கேடு, கொசு தொல்லை, துர்நாற்றம் உள்ளிட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நீண்ட வருடங்களாக இருந்து வரும் இப் பிரச் சனைக்கு நெடுஞ்சாலை துறையினர், மருத்துவத் துறையினர் இணைந்து முறையான தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.
0
Leave a Reply