25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


எஸ்எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95.14 சதவிகிதம் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் ஆறாவது மாவட்டமாக நமது மாவட்டம் இடம் பெற்றுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எஸ்எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95.14 சதவிகிதம் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் ஆறாவது மாவட்டமாக நமது மாவட்டம் இடம் பெற்றுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் ஏப்ரல் 2024ல் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில், விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் 357 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 114 தேர்வு மையங்களில் 11,792 மாணவர்களும், 12,523 மாணவியர்களும்  ஆக என மொத்தம் 24,315 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 10,988 மாணவர்களும், 12,146 மாணவியர்களும் என மொத்தம் 23,134 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி விழுக்காடு  (95.14 சதவீதம்) பெற்று தேர்ச்சி சதவீதத்தில் தமிழ்நாட்டில் 6-ஆவது மாவட்டமாக இடம் பெற்றுள்ளது.
மேலும், அரசுப்பள்ளிகள்- 57, சமூக நலப்பள்ளிகள்-3 , உதவி பெறும் பள்ளிகள் - 28, பதின்மப் பள்ளிகள் -52 என மொத்தமாக 140 பள்ளிகள்  100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
மாவட்ட அளவில் என்.கேசவப்பிரியா என்ற மாணவி 498/500 மதிப்பெண்களும் அதனைத் தொடர்ந்து வி.ஜன ஆனந்த் என்ற மாணவன் 497/500, எஸ்.சகானா பார்வதி என்ற மாணவி 497/500, எம்.யஷ்வந்த்தமன் என்ற மாணவன் 496/500 (சங்கரலிங்காபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி), ஜெயசூர்யா கார்த்திகேயன் என்ற மாணவன் 496/500, என்.திவாகரன் என்ற மாணவன் 496/500, எ.நந்தினி என்ற மாணவி 496/500, இ.செல்வராணி என்ற மாணவி 496/500, ஆர்.அக்ஷயா என்ற மாணவி 496/500, சி.வி.ரவீந்திரகுமார் என்ற மாணவன் 496/500, எம்.ஷாரு ப்ரீத்தி என்ற மாணவி 496/500 மதிப்பெண்கள்  பெற்று இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
ஆங்கிலம் பாடத்தில் 6 மாணவர்கள், கணக்கு பாடத்தில் 687 மாணவர்கள், அறிவியல் பாடத்தில் 101 மாணவர்கள், சமூக அறிவியல் பாடத்தில் 82 மாணவர்களும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News