25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


T20 உலக சாம்பியன்கள் கொண்டாட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

T20 உலக சாம்பியன்கள் கொண்டாட்டம்

உலக கோப்பையை கையில் ஏந்தியவாறு கேப்டன் ரோகித் சர்மா முதலில் இறங்கினார். லேசாக மழை பெய்தபோதும், ரசிகர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். இரண்டு பஸ் மூலம் மவுரியா நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனர். நுழைவுவாயிலில் மேளதாளம் முழங்க, பாரம்பரிய 'பாங்கரா' நடன கலைஞர்கள் வரவேற்றனர்.

பிரதமர் மோடியின் வீட்டுக்கு கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் உள்ளிட்டோர் காலை 11 மணிக்கு சென்றனர். இவர்களுடன் உணவு சாப்பிட்ட மோடி, உலக கோப்பை அனுபவங்களை கேட்டறிந்தார். பைனலில் ஒவ்வொரு 'ஷாட்' குறித்தும் அறிந்து வைத்திருந்தார். சூர்யகுமாரின் கலக்கல் கேட்ச் உட்பட அனைத்து அம்சங்களையும் ஆர்வமாக கேட்டார்.

T20 உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ.125 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. நேற்று மைதானத்தில் இதற்கான 'செக்' வீரர்களிடம் வழங்கப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News