தமிழக வீரர் இனியன் பன்னீர்செல்வம் காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கம் வென்றார்.
இலங்கையில் நடந்தகாமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட 14 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் ரேபிட், பிளிட்ஸ், கிளாசிக்கல் ஆகிய 3 வடிவங்களில் ,ஓபன் பிரிவில் 96 பேர் பங்கேற்றனர். இதன் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவுகளில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம் 7-வது மற்றும் கடைசி சுற்று முடிவில் 6½ புள்ளிகள்பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார்.
இந்தியாவின் ஸ்ரீஹரி ரேபிட் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், மித்ரபா வெண்கலப் பதக்கமும், பிளிட்ஸ் பிரிவில் இந்தியாவின் ரோகித் கிருஷ்ணா வெள்ளிப்பதக்கமும், ஸ்ரீஹரி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
0
Leave a Reply