25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தமிழக வீரர் இனியன் பன்னீர்செல்வம்  காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கம் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழக வீரர் இனியன் பன்னீர்செல்வம் காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கம் வென்றார்.

 இலங்கையில் நடந்தகாமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட 14 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 

இந்த போட்டியில் ரேபிட், பிளிட்ஸ், கிளாசிக்கல் ஆகிய 3 வடிவங்களில் ,ஓபன் பிரிவில் 96 பேர் பங்கேற்றனர். இதன் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவுகளில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் இனியன்  பன்னீர்செல்வம் 7-வது மற்றும் கடைசி சுற்று முடிவில் 6½ புள்ளிகள்பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார்.

இந்தியாவின் ஸ்ரீஹரி  ரேபிட் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், மித்ரபா வெண்கலப் பதக்கமும், பிளிட்ஸ் பிரிவில் இந்தியாவின் ரோகித் கிருஷ்ணா வெள்ளிப்பதக்கமும், ஸ்ரீஹரி வெண்கலப் பதக்கமும் வென்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News