திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மஹா கும்பாபிஷேகம் நடை பெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான முருகப்பெருமானின் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 2023ல் திருப்பணிகள் துவங்கின. பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை, 6:15 முதல், 6:50 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடை பெற்றது. . 6100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப் பட்டன.
கோயிலுக்குள் நேற்று மதியம் 12:00 மணிக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 12ம் கால யாக சாலை பூஜை அதிகாலை 4:00 மணிக்கு நடை பெற்றது. காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் ராஜகோபுர கும்ப கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம்நடை பெற்றது.அதேநேரத்தில், சண்முகர், ஜெயந்திநாதர்,வள்ளி, தெய்வானை, குமரவிடங்கபெருமாள், நடராஜர், உள்வெளி பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபி ஷேகம் நடை பெற்றது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க 20 ட்ரோன் வசதி செய்யப்பட்டது.
0
Leave a Reply