வாழைப்பழத்தின் காம்பு பகுதி கருக்காமல் இருக்க....
காய்கறி நறுக்குறதிலேயே கஷ்டமான காரியம் கொத்தவரங்கா, பீன்ஸ், வெண்டைக்காய் போன்றவற்றை நறுக்குவது தான். இவைகளை சுலபமாக நறுக்க காயைசுத்தம்செய்தபிறகுமுதலில்காய்களைஒன்றாக சேர்த்து வைத்து ரப்பர் பேண்ட் போட்ட பிறகு நறுக்கி ஒரே நேரத்தில் நிறைய காய்களை சுலபமாக நறுக்கி விடலாம்.
இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும், இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும். தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொறு மொறுப்பாக வரும்.
வெந்தயத்தை கறுப்பாக வறுத்து தூள் செய்து காப்பி பொடியில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை வியாதிஉள்ளவர்களுக்கு நல்லது.
சாம்பார் கீரை, புளிப்பு கூட்டு போன்றவற்றை கொதித்து இறக்கும் சமயம் துளி வெந்தய பொடி தூவி இறக்கினால் நல்ல வாசனையாக இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியம்.
வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைத்தால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்.
0
Leave a Reply